நேற்று ஒரு திருமணத்துக்காக, டொரோண்டோ நகரிலிருக்கும் காசாலோமா (Casaloma) சென்றிருந்தபோது அந்தி சாய்ந்து இருள் கவிந்திருந்தது.
நிகழ்வு முடிந்து திரும்புகையில் வாகனத்தரிப்பிடத்தில் தற்செயலாக, அங்கிருந்த மின்குமிழ் வெளிச்சத்தில், நான் நின்றிருந்த தரையில் தென்பட்ட என் நிழல் இது.
ஒரு சாய்வில் , சிறிது நீண்டிருந்த நிழலைப் பார்த்ததும் , ஓவியமொன்றைப் பார்க்கும் உணர்வு எனக்கேற்பட்டது. உடனேயே அவ்வனுபவத்தை என் அலைபேசிக் கமராவில் அகப்படுத்திக்கொண்டேன்.
எனைவிட்டு என்றும் பிரியாத
என் உறவே!
இன்றுனைப்பார்த்ததும்
ஒரு கணம் மயங்கினேன்.
ஓவியர் ஒருவர்தம் கைவண்ணத்தில்
நிசம் தன்மேல் ஏற்படுத்தப்பட்ட
கற்பனை உணர்வால்,
படைப்பாற்றலால்,
தரையில் கிடக்குமொரு சித்திரமாக
நீண்டிருந்தாய்.
நிழலே நான் நெஞ்சிழந்தேன்.
உனைப்பார்த்து ஒரு கணம் சொக்கினேன்.
தன் நிழல் கண்டு
தனை மறந்த எழுத்தாளன்
இவன் ஒருவனாகவே
இருக்கக் கூடும்.
No comments:
Post a Comment