Monday, September 30, 2024

வ.ந..கிரிதரன் பாடல்: சிந்திப்போம்!



இசை &  குரல்: AI SUNO | ஓவியம்: AI

சிந்திப்போம்!

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

தனிமையில், இயற்கையை இரசிப்பேன் எப்போதும்.
இனியதோர் இன்பம் அதுபோல் வேறுண்டோ/
மனிதரின் பெரும் சொத்து சிந்திப்பே.
மனத்தில் இன்பம் சேர்ப்பதும் சிந்திப்பே.

சிந்திப்பது  என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.

Saturday, September 28, 2024

அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி....



ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார் திசாநாயக்க பற்றிச் சுருக்கமான ஆனால் முக்கியத்துவம் மிக்க கட்டுரையொன்றினை 'அநுரா குமார திசாநாயக்க; “இடதுசாரி” நட்சத்திரம் இலங்கையில் உதயம்' என்னும் தலைப்பில் டெய்லி மிரர் (இலங்கை) பத்திரிகையில் எழுதியுள்ளார். அதிலவர் அநுரா குமார திசாநாயக்கவின் வாசிப்பு மற்றும் நீச்சல் பழக்கம் பற்றியும் விபரித்துள்ளார். அவற்றின்  மூலம் அநுரா எவ்விதமான நூல்களை வாசிப்பார், எத்தகைய தேகப்பயிற்சி அவருக்குப் பிடித்தது போன்ற விடயங்களை அறிய முடிகின்றது.

Friday, September 27, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.



இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI

 புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

நாடு முன்னேற ஒற்றுமை அவசியம்.
பாடு படுவோம் ஒற்றுமை பேண.
பிரிந்து கிடந்தது இனியும் வேண்டாம்.
புரிந்து கொண்டே பயணத்தைத்  தொடர்வோம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

இனவாதம் வேண்டாம் மதவாதம் வேண்டாம்.
இருக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
கடந்தவை பாடங்களாக இருக்கட்டும். படிப்போம்.
நடப்பவை நல்லதாகத் தொடரவே நினைப்போம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

வ.ந.கிரிதரன் பாடல் - புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.



இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

நாடு முன்னேற ஒற்றுமை அவசியம்.
பாடு படுவோம் ஒற்றுமை பேண.
பிரிந்து கிடந்தது இனியும் வேண்டாம்.
புரிந்து கொண்டே பயணத்தைத்  தொடர்வோம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

இனவாதம் வேண்டாம் மதவாதம் வேண்டாம்.
இருக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
கடந்தவை பாடங்களாக இருக்கட்டும். படிப்போம்.
நடப்பவை நல்லதாகத் தொடரவே நினைப்போம்.

புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.

Tuesday, September 24, 2024

நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலும், வடகிழக்கு வாக்காளார்களின் தெரிவுகளும் பற்றி...


நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான  முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.

1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.

2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.

Monday, September 23, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI

உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர்  வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.

வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு  உற்பத்திச் சக்திகளின் வரலாறு.

Saturday, September 21, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!


- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI

என் பிரியம் மிகு யாழ்  மண்ணே!

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த  மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.

உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில்  நிலைத்திருக்கும் பிரிய  யாழ்மண்ணே.

Friday, September 20, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளி நாம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

காலவெளி நாம்

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.

முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?

காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.

Thursday, September 19, 2024

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

மனத்தை மயக்கும் இந்தநிலா!

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!



இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

மனத்தை மயக்கும் இந்தநிலா!

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

Wednesday, September 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!



இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்டுக் களித்திட: https://www.youtube.com/watch?v=snzGyWR-BwE

காட்சியும் சித்(த)து விளையாட்டும்!

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

நாம் காண்பதாக உணர்வது என்பதெல்லாம்
நம் மூளையின் மின்சமிக்ஞை என்றால்
வெளியில் இருப்பதாக எண்ணுவது எல்லாம்
உள்ளத்தின் மாயத் தோற்றங்கள் தானா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

வ.ந.கிரிதரன் பாடல்: ஏணி பாம்பு விளையாட்டு



இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

ஏணி பாம்பு விளையாட்டு

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

ஏறுவதும் இறங்குவதும் மீண்டும் ஏறுவதும்
எல்லாமே சகஜம் நம்வாழ்விலும் புரிந்துகொள்.
ஏறினால் பெருமிதத்தில் ஆழ்ந்து விடாதே.
இறங்கினால் இடிந்துபோய் இருந்து விடாதே.

ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?

Tuesday, September 17, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.



இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

ஒழுங்குள்ள வாழ்வில் இன்பம்  உண்டு.
ஒழுங்குதனை என்வாழ்வில் ஒழுகிட அருள்வாய்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.

கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.

Monday, September 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: பூவுலகின் குழந்தைகள் நாம்!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

 

பூவுலகின் குழந்தைகள் நாம்!

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

பிரிவினைகள் அற்ற வாழ்வே இன்பம்.
எரியும் உலகை இல்லாது ஒழிப்போம்.
புரிந்து கொண்டே பய    ணம் தொடர்வோம்.
தெரிந்து கொள்வோம் பிறப்பின் பயனை.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

வாயுக் குமிழியென வெளியில் விரையும்
ஓயுதல் அற்ற இயக்கத்தில் பூமி.
இருப்பதை உணர்ந்தால் மோதல் இல்லை.
விருப்புடன் வாழ்வை அணுகுவோம் உண்மை.

பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.

வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்.


 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

கணந்தோறும் பிறப்போம்!

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள்  கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.

ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.

Sunday, September 15, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


காலவெளிப் பயணம்!


முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.




இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


காலவெளிப் பயணம்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.

முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.

Saturday, September 14, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!


 

இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில்  கேட்க - https://www.youtube.com/watch?v=XBZ2BLPV7Ac

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!



இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

நல்ல நாள்!

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

Friday, September 13, 2024

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -


6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்


 ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீரெனக் கோட்டைக்குப் போய் ஓவியம் வரைவதற்கு வேண்டிய சில பொருள்களை வாங்க வேண்டுமென்ற நினைவு வர, டாக்ஸி டிரைவரிடம் கோட்டைக்குப் போகும் படி உத்தரவிட்டான். ஏற்கனவே அவன் கொண்டு வந்திருந்த வண்ண மைகளும், ஓவியத் தாள்களும் தீர்ந்து போயிருந்ததால் அவன் அவற்றை இன்று சற்று அதிகமாகவே வாங்க வேண்டியிருந்தது. பொதுவாக ஸ்ரீதரின் பொழுதுபோக்குக் கலைகளில் சித்திரம் எழுதுவது முக்கியமான ஒன்றேயாயினும் இன்று அவன் அதில் இவ்வளவு நினைவாயிருந்ததற்குப் புதிய காரணம் ஒன்றும் இருக்கிறது.  தன் காதலி பத்மாவின் படமொன்றைத் தன் கையால் எழுத வேண்டுமென்று அவன் “ஐஸ்கிறீம் பார்லரி”ல் தனக்குள் முடிவு செய்திருந்ததே அது.

பத்மாவின் மது விழிகளும், அவற்றுக்கு மேலெல்லையாகக் கோதண்டம் போல் விளங்கிய அவளது வளைந்த புருவங்களும், அப்புருவங்களுக்கும் அவளது வண்டு விழிகளுக்குமிடையே துடிதுடித்துக் கொண்டிருந்த மயிரடர்ந்த பூவிதழ் போன்ற இமை மடல்களும் அன்று அவனை முன்னெப்போதுமில்லாத அளவுக்குக் கவர்ந்திருந்தன. காதல் வயப்பட்ட ஓர் ஆணின் கண்களிலே, ஒரு பெண்ணின் அழகு பார்க்குந்தோறும், புத்தெழில் பெற்றுப் பொலிகிறது. நல்ல கவிதையை வாசிக்க வாசிக்க, அதில் புதிய நயங்கள் தோன்றுவது போலக் காதற் கன்னியையும் பார்க்கப் பார்க்கப் புதிய அழகுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. “அவள் புறங்கை எவ்வளவு அழகாயிருக்கிறது! அவள் விரல்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன! அவள் நெற்றியில் காணப்படும் பூனை மயிர் கூட எவ்வளவு அழகு! நேற்று நான் அவற்றைக் காணாமல் கண்ணிருந்தும் குருடனாயிருந்ததற்குக் காரணம் என்ன? அவள் பால் எனக்குள்ள காதல் போதிய அளவு வளர்ச்சி பெறாததா?  அப்படியானால், நான் குற்றமுடையவனல்லவா?” என்று கூடக் காதலர்கள் தாபமடைவதுண்டு. பத்மாவைப் பொறுத்த அளவில் ஸ்ரீதரும் அவளிடத்துத் தினந்தோறும் ஒரு புதிய அழகைக் காணக் கூடிய காதற் பரவச நிலையிலேயே இருந்தான். “ஐஸ்கிறீம் பார்லரில் வெகு அருகில் அமர்ந்து அவளது அழகைப் பல கோணங்களிலிருந்தும் அள்ளிப் பருகிய அவன், அவளைத் தெவிட்டாத பேரழகை ஓவியமாக்கிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டான். அந்த ஆசை தான் அதற்கு வேண்டிய பொருள்கள் யாவற்றையும் உடனே சித்தம் செய்யும்படி அவனைத் தூண்டிக் கொண்டிருந்தது. கோட்டைக்குப் போய் ஒன்றுக்குப் பதில் நாலு கடைகளில் ஏறி இறங்கி, அவற்றை வாங்கிக் கொண்டு அவன் வீடு வந்து சேர்ந்த பொழுது சரியாக மணி இரண்டாகி விட்டது. வேலைக்கார சுப்பையா கேட்டைத் திறந்து டாக்ஸியை பங்களா வளவுக்குள் அனுமதித்து, அதிலுள்ள சாமான்களை எடுக்க, ஸ்ரீதர் டாக்சிக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு, பங்களாவுக்குள் நுழைந்த பொழுது, அங்கே அவனை வரவேற்க, இன்பமான செய்தி ஒன்று காத்திருந்தது.

Wednesday, September 11, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதலை உணர வைத்தாய்!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க : https://www.youtube.com/watch?v=PUWeFIBBsek

காதலை உணர வைத்தாய்!  

 ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

பார்வையில் எவ்விதம் இவ்வித உணர்வுகள்
படம் விரித்தன. படைப்பின் அற்புதமே.
நெஞ்சின் ஆழத்தே சென்று உறைகின்றன.
வஞ்சியுன் வருகையால் இதை உணர்ந்தேன்.

ஆடி நடந்து வந்தாய் எனையிழந்தேன்.
பாடினாய்  உன்னை நினைத்தே சிறகடித்தேன்

Tuesday, September 10, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நோக்கமென்னும் கலங்கரை விளக்கு!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI -

நோக்கமென்னும் கலங்கரை விளக்கு!

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

கலங்கரை விளக்கு வழியைக் காட்டும்.
வாழ்க்கைக் கடலில் வழியைக் காட்டும்
நோக்கம் என்னும் கலங்கரை விளக்கே.
நினைவில் வைப்போம். பயணம் தொடர்வோம்.

நோக்கம் அற்ற வாழ்க்கை என்றால்
ஊக்கம் அற்று வீணாய்ப் போகும்.

வ.ந.கிரிதரன் பாடல்; வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

சுழல்கள் நிறைந்த பேராறு வாழ்க்கை.
உழலும் நெஞ்சில் உறுதியாக நிற்பேன்.
குலைந்து போவதால் என்ன பயன்?
அலைக்கழிந்து வீழ்வதால் நன்மை என்ன?

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

Monday, September 9, 2024

தமிழ் இலக்கியத் தோட்டம் 2023 - இயல் விருது - ஆர்.பாலகிருஷ்ணன் - தகவல்: அ.முத்துலிங்கம் -


சிந்துவெளி ஆய்வாளராகிய திரு ஆர். பாலகிருஷ்ணன், இந்திய ஆட்சிப்பணி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ‘தமிழ் ஒரு மாநிலத்தின் மொழியல்ல, அது ஒரு நாகரிகத்தின் மொழி’ என்றும் ‘சங்க இலக்கியம் இந்தியத் துணைக்கண்டத்திற்கான இலக்கியம்’ என்றும் தொடர்ந்து வலியுறுத்திவரும் இவர், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 1958இல் பிறந்தார். முதுகலை தமிழ் இலக்கியமும் இதழியல் பட்டயமும் பெற்று பத்திரிக்கையாளராகப் பணியைத் தொடங்கினார். பின்னர், இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளை தமிழிலேயே முதன்முதலில் எழுதி வென்று 1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் ஒடிசா மாநிலத்தின் பணித்தொகுதியில் இணைந்தார்.
 
தற்போது இவர் சென்னையிலிருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் ஓர் அங்கமான சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.

வ.ந.கிரிதரன் பாடல்; வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

சுழல்கள் நிறைந்த பேராறு வாழ்க்கை.
உழலும் நெஞ்சில் உறுதியாக நிற்பேன்.
குலைந்து போவதால் என்ன பயன்?
அலைக்கழிந்து வீழ்வதால் நன்மை என்ன?

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

வ.ந.கிரிதரன் பாடல்; வாழ்க்கைப் புயலில் வாடாத பெருமரம்



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI


வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

சுழல்கள் நிறைந்த பேராறு வாழ்க்கை.
உழலும் நெஞ்சில் உறுதியாக நிற்பேன்.
குலைந்து போவதால் என்ன பயன்?
அலைக்கழிந்து வீழ்வதால் நன்மை என்ன?

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

இருக்கும் வரையில் இன்பம் உறுவோம்.
பெருந்தடை எதிர்பட்டால் எதிர் கொள்வோம்.
ஓரமாக ஒதுங்கிப் போக மாட்டேன்.
எதிர்கொள்வேன். எதிர்நீச்சல் போட்டுச் செல்வேன்.

வாழ்க்கைப் புயலில் வாடாத  பெருமரம்.
தாழாத திடமரம் அது நானே.

Sunday, September 8, 2024

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம்: எழுத்தாளர் அரங்கம் (25) - எழுத்தாளர் வ.ந.கிரிதரன் அனுபவங்கள்!


கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய எழுத்தாளர் அரங்கம் நிகழ்வில் கடந்த வெள்ளி கலந்துகொண்டு உரையாற்றினேன்.


அதில் என் எழுத்துலக அனுபவங்களை விரிவாகவே பகிர்ந்துகொண்டேன். எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை அறிவதில் பெரு விருப்பு மிக்க எனக்கு என் எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதும் முக்கியமான அனுபவம்.

நிகழ்வில் நான் ஆற்றிய உரையினை, கலந்துகொண்டவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கு நீங்கள் கேட்கலாம்.
கேட்டுப்பாருங்கள். என் எழுத்துலக ஆர்வத்தினை, வாசிப்பிலுள்ள பெரு விருப்பினை, என் எழுத்துலகக் காலகட்டங்களை, என் சிந்தனைகளை எனப் பலவற்றை இங்கு நீங்கள் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=380_YhEKI9s

இணையகக் காப்பகத்தில் (archive.org) ' வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!


வ.ந.கிரிதரன் பாடல்கள்!

தற்போது இணையகக் காப்பகத்தில் (archive.org) 'வ.ந.கிரிதரன் பாடல்கள் மின்னூல்!' ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. வாசிக்க விரும்பும் எவரும் வாசிக்கலாம். பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு

தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மானுடருக்கு ஆரோக்கியமான பங்களிப்பை நல்கி வருகின்றது. செயற்கை அறிவும் அத்தகைய தொழில் நுட்பமே. எனது பாடல் வரிகளுக்குச் செயற்கைத் தொழில் நுட்பம் இசையமைத்ததுடன் அல்லாது பாடுவதற்கான குரலையும் வழங்குகின்றது.  பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல் வரிகளைப் பல் வகைகளில் இசையமைத்து, பாட வைத்துப் பரிசோதிக்க இத்தொழில் நுட்பம் வழி சமைத்துள்ளது. அவரது பாடல் எழுதும் திறமையினையும் வளர்ப்பதற்கும் இத்தொழில் நுட்பம் உதவுகின்றது.

இவ்விதமாகச் செயற்கை அறிவு இசைமையத்துப் பாடிய பாடல்களை நீங்கள் எனது யு டியூப் சானலான வ.ந.கிரிதரனின் பாடல்கள் சானலில் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1  அட்டைப்பட ஓவியம்: செயற்கை அறிவு (AI) | இசை & குரல்: செயற்கை அறிவு (AI) SUNO.

Thursday, September 5, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.


இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

சிட்டு ஞானத்தின் வெளிப்பாடு.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

உன் சிறகடிப்பில் உள்ளது
உன் படைப்பின் மகத்துவம்.
பறத்தல் என்பது  சுலபமல்ல.
பறத்தல் என்பது தொழில்நுட்பம்.

பூவில் தேனெடுக்கும் சிட்டே!
பேரின்பம் தருமெழில் சிட்டே.

Wednesday, September 4, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பின் சிறப்பு!



இசை & குரல் : AI SUNO | ஓவியம்; AI


படைப்பின் சிறப்பு!


இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

படைப்பில் குறைகள் பல.
படைத்தவரின் மென்பொருள் வழுக்கள்.
அடிப்படையில் உயிர்கள் அனைத்தும்
உருவாவது வடிவிலொத்த உயிரணுக்களில்.

இருப்பின் இனிமை எதுவென்றால்
படைப்பின் சிறப்பு அதுவென்பேன்.

வ.ந.கிரிதரன் பாடல்: சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

இருப்பில் சில தருணங்களைப் பற்றிய நினைவுகள் சிந்தையை விட்டு நீங்குவதேயில்லை. இத்தருணமும் அத்தகையதே. கறுப்பு ஜூலையில் உயிர் தப்ப ஓடிக்கொண்டிருக்கையில் அருகில் என்னருகே சிறகடிக்கிறது சிட்டு ஒன்று. அப்பொழுது நான் நினைத்தேன் 'சிட்டுக்குரிய சுதந்திரம் கூட இந்நாட்டுக் குடிமகனாகிய எனக்கு இல்லை.' அத்தருணமும் , நினைப்பும் நிரந்தரமாகவே என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன. இவ்வனுபவம் பற்றி எனது 'குடிவரவாளன்' நாவலிலும் பதிவு செய்துள்ளேன்.

சிந்தையில் நிலைத்து நிற்கும் சில தருணங்கள்!

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

அத்தகைய தருணங்களில் ஒன்றே இத்தருணம்.
இத்தகைய தருணங்கள் வலியைத் தருபவை.
நினைத்துப் பார்க்கின்றேன் மீண்டும் ஒருதடவை.
நேற்றுத்தான் போலின்னும் நினைவில் தெரிகிறது.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை.

கறுப்பு ஜூலையில் தப்ப ஓடுகையில்
கண்ணில் தெரிகிறது அந்தச் சிட்டு.
ஓடும் என்னருகில் சிறகடிக்கும் சிட்டு.
விட்டு  விடுதலையாகிச் சிறகடிக்கும் சிட்டு.

சில தருணங்கள் பற்றிய நினைவுகள்
சிந்தையை விட்டு நீங்குவதே  இல்லை

Tuesday, September 3, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: வெகுசன இலக்கியத்தின் தேவை!



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

பாலர் பருவத்தில் பாலர் இலக்கியம்.
படிப்பது வளர்ச்சியின் தேவை அல்லவா.
அதன்பின் அம்புலிமாமாக கதைகள் படித்தோம்.
அதன்பின் வெகுசனப் படைப்புகளில் மூழ்கினோம்.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

தீவிர வாசிப்பு நோக்கிய பயணத்தில்
தவிர்க்க முடியாதது வெகுசன இலக்கியம்.
கல்கி, அகிலன், சாண்டியல்யன், ஜெகசிற்பியன்
இவர்களின் படைப்புகள் எம்மை மகிழ்வித்தன.

வெகுசன இலக்கியத்துக்கும் இடம் உண்டு
வாசிப்பின் வளர்ச்சிப் படிக்கட்டில் நிச்சயம்.

Monday, September 2, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: ஓயும் வரையில் ஓய்வில்லை



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

ஓயும் வரையில் ஓய்வில்லை

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

இரவும் பொழுதும் நாளும் வருடமும்
இரவி ஓய்வு எடுப்பது உண்டா?
இரவில் தண்ணொளி சொரியும் நிலவு
உறக்கத்தில் கண்ணயர்வது இல்லை அல்லவா.

ஓயும் வரையில் ஓய்வில்லை உயிர்களுக்கு.
ஓய்வு என்பது இயற்கையில் இல்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: அலைந்து திரியும் அகதி மேகமே!


இசை & குரல்:  AI SUNO | ஓவியம்: AI -


அலைந்து திரியும் அகதி மேகமே!

நாட்டுச் சூழல் காரணமாகப் புகலிடம் நாடி அகதியாக அலையும் ஓர் அகதி மேகத்தைப் பார்த்துக் கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

நாடு விடு நாடு நகர்கின்றாய்.
ஊரு விட்டு ஊரு செல்கின்றாய்.
இருப்பதற்கு ஒரு நாடு உனக்கும்
இல்லையோ மேகமே சொல்லுவாய் எனக்கு.

அலைந்து திரிகின்றாய் மேகமே நீயும்
நாடற்ற அகதியோ என்னைப் போல.

Sunday, September 1, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற



இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற!

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

முடிந்த போரின் அழிவுகள் இன்னும்
படிந்தே இருக்கும் அனைவர் நினைவினில்.
நடந்தவற்றில் இருந்தே பாடங்கள் படிப்போம்.
நல்லெண்ணம் வளர்த்திட நடவடிக்கை எடுப்போம்.

நல்லிணக்கம் தேவை நாடு முன்னேற
பல்லின மக்கள் வாழ்வில் இணைந்திட

Saturday, August 31, 2024

வ.ந.கிரிதரன் பாடல். என்னை மாற்றிய உன் வரவு!


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI -

என்னை மாற்றிய உன் வரவு!

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

காதல் உணர்வு படைப்பின் அற்புதம்.
காலம் கடந்தும் நிலைக்கும் காவியம்.
பொருள் உலகில் மருள் நீக்கும்
அரும் பெரும் ஓருணர்வு அதுவாகும்.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

Friday, August 30, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - தாழ்வு தவிர்போம்!



- இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI -

தாழ்வு தவிர்போம்!

வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாள்.
மானமுள்ள மனிதருக்கு அவ்வை அன்றே.
மதி தாழ்த்தும் எவற்றையும் தவிர்ப்போம்.
மண்ணில் வெற்றி நிச்சயம் குவிப்போம்.

வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.

Thursday, August 29, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதல் செய்வீர்!


                                                    இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

 காதல் செய்வீர்!

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

ஆடி அசைந்து செல்லும் நதி.
அதுபோல்தான் வாழ்வில் காதல் நதியும்.
கூடி இன்பம் உயிர்கள் அடைய
காதல் நதியும் கரைபுரண்டு பாயும்.    

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

Wednesday, August 28, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இணைந்து வாழ்வோம்.



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=TZNTRdlr6_M

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

மல்லிகை, முல்லை, தாமரை என
மலர்கள் இருப்பது மகிழ்வினைத் தரும்.
மா, முதிரை, பாலை என
மரங்கள் இருப்பதும் பயனைத்  தரும்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

Monday, August 26, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.


இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையைப் பேணுவோம். 


இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

வ.ந.கிரிதரன் பாடல் - விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்

இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும் விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம் புரிந்திட முயற்சி செய்...

பிரபலமான பதிவுகள்