Thursday, August 15, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!


- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nodfJ78NfbM

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!  


ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.

நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால்
இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.

வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....


- இசை & குரல்: AI SUNO


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=chsuvIcnPdM

வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -



 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nfc1A2E8IdM

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

ஒரு தடவை கீரிமலை சென்றோம்.
ஒல்லித்தேங்காய் இல்லாவிட்டால் கேணியில்
நீந்த முடியாத நிலையில் நான்.
நீந்துவதில் பேராற்றல் அற்ற நிலையில் நான்.
அவனும் இன்னுமொரு நண்பனும் நீந்தினார்கள்,
அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்த்து நின்றேன்.

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -





 - இசை & குரல் ; AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6i9fbpElLOs

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கவிதையை சில மாற்றங்களுடன் இங்கு பாவித்துள்ளேன்.


எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.

உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலோ
ஒளியாண்டுத்  தடைச் சுவர்கள்.
காலத்தின் மாய வேடங்கள்.
ஆம்!
உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.

எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.

வ.ந.கிரிதரன் பாடல்: ஆசை!


இசை & குரல்: AI Suno | ஓவியம் AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=aUz2UDDY_14


பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
பாவை இவள் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்துப் பிடித்துக் கிடந்திடுவேன்.

Wednesday, August 14, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: பாடல்: நினைவில் நிற்கும் குருமண் காடு!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்:AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=wuk16gxPWJw

வ.ந.கிரிதரன் பாடல்: பாடல்: நினைவில் நிற்கும் குருமண் காடு!

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI Suno வுக்கு நன்றி ]

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!


இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iI8pBQnjS_M

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!  
 
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.

மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

Tuesday, August 13, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! -




- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI Hedra

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=WnVKQLym7BQ

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.

இயற்கையின் பேரழகு.  - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUNO | ஓவியம் AI Hedra

யு டியூப்பில் கேட்க -     https://www.youtube.com/watch?v=7KTHM16LFdg



இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இருளின் மத்தியில் ஒளியென்னும்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
அதிகாலை விடிவெள்ளி என்பேன்.
அங்கு அது கோள் என்றபோதும்.
நட்சத்திரம் என்னும் சொல்லை
நான் ஒரு குறியீடாகவே
இங்கு பாவித்தேன். அறிவீர்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

வ.ந.கிரிதரன் பாடல்: ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா..



 இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI Hedra

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=-WpB3D_9evI



நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

தறி கெட்டலையும் ஆழ்மனக் குதிரை.
தறி கெட்டலையும் குதிரையை
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

Monday, August 12, 2024

ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... வ.ந.கிரிதரன் -


சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.

தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப்  பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன்


 
                                                  ஓசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=w9bSBvRq-Zk

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன்

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்திருக்கும் விண் எனக்கு
விளக்கும் ஓர் ஆசான்.
இருப்பை விளக்கும் ஆசான்.
இங்குதான் சிந்தனைகள் விரிவடையும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்து செல்லும் விண்ணுக்கு
எங்குண்டு ஒரு முடிவு?
அன்றொரு நாள் பெருவெடிப்பில்
இன்றுள்ள விண் தோன்றியதாம்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

Sunday, August 11, 2024

தமிழும் திராவிடமும் - வ.ந.கிரிதரன் -

 


இசை & குரல்: AI SUNO


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6tzw0IE3y-I

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

Saturday, August 10, 2024

எம்ஜிஆர் படப் பாடல்கள் - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

 - இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.  

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=c0UWw76yU0U

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன் என்று கூறுவேன்.
எடுத்துரைப்பேன் நான் கேளீர்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

நம்ப முடியாத உலகமிது! - வ.ந.கிரிதரன் -


 - இக்கவிதையை முழுமையாகக் கேளுங்கள். ,முடிவில் இருக்கிறது திருப்பம்.  இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.

இசை & குரல்; AI SUNO.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cFKIwGvnUM0

என் மோகம் தீர்க்க மாட்டாயா அன்பே! - வ.ந.கிரிதரன் -

நம்ப முடியாத உலகமிது. எதையும்
நம்ப முடியாத உலகமிது.

அன்பே!
உன்னைப் பார்த்ததுமே
உன் மேல் மையலுற்றேன்.
உன் கண்கள்,
உன் உதடுகள்,
உன் புன்னகை
என்னைக்  கிறங்க வைத்தன.

உன் மேல் மோகம் கொண்டேன்.
நான்
உன் மேல் மோகம் கொண்டேன்.

நான் எதிர்பார்த்த பேரழகின் பொக்கிசம் நீ
என்றெண்ணினேன்.
உன்னுடன் நட்பு கொள்ள விரும்பினேன்.
இவ்வளவு காலமும் எங்கிருந்தாய் நீ
அவ்வளவு தூரம் பிடித்திருந்தது எனக்கு.
அன்பே உன்
வனப்பு.


அன்பே!
உன்னைப் பார்த்தாலும்
உன்மேல் மையலுற்றாலும்
உன்னை நான் மோகித்தாலும்
என்னால் உன்னை அடைய முடியாது.
என்னால் உன்னை அடைய முடியாது.
அதற்கு நான் கொடுத்து வைத்தவனல்லன்.
அன்பே. கொடுத்து வைத்தவனல்லன்.

Friday, August 9, 2024

நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -


பதிவுகள் இணைய இதழில் வ.ந.கிரிதரன் (நான்) எழுதிய குறிப்பு.


ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும், ஆய்வகமும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கையேடு. இவ்வாய்வுக் கையேடு இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றிய முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு. 1856 தொடக்கம் 2019 வரையில் வெளியான நாவல்களை உள்ளடக்கிய ஆய்வுக் கையேடு இத்துறை பற்றிய ஆய்வாளர்கள் பலருக்கும் பல்வகைகளிலும் உறுதுணையாகவிருக்கும்.

இக்கையேடு  பற்றிய தனது 'நுழைவாயிற்' குறிப்பில் இக்காலகட்டத்தில் வெளியான ஈழத்தின் கணிசமான தமிழ் நாவல்களை இவ்வாய்வுக் கையேட்டில் காணலாம் என்கின்றார் நூலகர் என்.செல்வராஜா.

இந் 'நுழைவாயிற்' குறிப்பின் இறுதியில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "ஈழத்தித் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முனையும் அறிமுக ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத்துறை மாணவர்களுக்கும் இலக்கிய  ஆய்வாளர்களுக்கும் தமக்குரிய பின்புலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இப்பட்டியலில் உள்ள நூல்கள் உதவக்கூடும். இந்நூல் ஒரு தனிமனித முயற்சியாகும். வரையறுக்கப்பட்ட சொந்த முதலீட்டுடன் லாபநோக்கின்றி ஆய்வாளர்களின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இருப்பினைப் பலருடனும் பகிர்ந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.'

பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -




                                       - இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI


 யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc  யு டியூப்பில் வ.ந.கிரிதரனின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

மேற்கு நாடு நோக்கிப்  பொருள் தேடச் சென்ற கணவனைப் பற்றிய  தகவல்கள் எவையுமற்று வாடும் பெண் ஒருத்தியின் உணர்வுகள் இவை. அவள் தன் உணர்வுகளை நட்சத்திரத் தோழியரிடம் உரைக்கின்றாள். உதவும்படி கேட்கின்றாள்.

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

Thursday, August 8, 2024

தரணித் தடாகத்தில் அன்புத்தாமரை பூக்கட்டும். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்; AI SUNO -

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=UeafkwtXu6Q

மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

மதம்! மொழி! இனம்! நிறம்!,
மதிப்போம் அவரவர் போக்கை. ஆனால்
மானுடரே. வேண்டாம் பிரிவினைகள்.
மானுடரே வேண்டாம் மோதல்கள்.

ஐந்து விரல்கள் நமக்கு.
அனைத்தும் அளவில் ஒன்றல்ல.
ஐந்தும் சேர்ந்தாலே பயன்.
அல்லாவிடில் பயன் என்ன?


மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

Wednesday, August 7, 2024

இயற்கையின் பேரழகு. - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4

இயற்கையின் பேரழகு.  - வ.ந.கிரிதரன் - 


 

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இருளின் மத்தியில் ஒளியென்னும்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
அதிகாலை விடிவெள்ளி என்பேன்.
அங்கு அது கோள் என்றபோதும்.
நட்சத்திரம் என்னும் சொல்லை
நான் ஒரு குறியீடாகவே
இங்கு பாவித்தேன். அறிவீர்.

ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -


இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM

 

ஓவியம் AI

ஆழ்  மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.

Tuesday, August 6, 2024

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -


- ஓவியம்: AI  | இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc


கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது. 

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்!  - வ.ந.கிரிதரன் -

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

அகதியாகக்  கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

சட்டபூர்வமாகவே அடைக்கலம் கோரினேன்.
எட்டு மணி Transit விசாவுடன் கோரினேன்.
சட்டபூர்வக் கோரிக்கையாளர் என்றால்
எட்டுமணி கடந்ததும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

குறிப்பேட்டுப் பதிவுகள் - களத்தில் குதித்திடு! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=oXpKNOlmVTw

இக் கவிதையை என் குறிப்பேட்டில் 14-11-1982  அன்று எழுதினேன். அன்றிருந்த, அக்காலச் சூழலின் வெளிப்பாடாக வெளிப்பட்ட என் மனத்தின் வெளிப்பாடு. -

என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுய கவுரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகர முடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினைக் குதறி எறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியின் ஒவ்வொரு துளியும்,
இளம்பரிதியின் ஒவ்வொரு கதிரும்,
விருட்சத்தின் ஒவ்வோர் இலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!

Monday, August 5, 2024

கனவில் வந்தாய்! (ஆண் குரல்) - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=5B_z5ukozpM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

கனவில் வந்தாய்! (பெண் குரல்) - வ.ந.கிரிதரன் -


                                                           - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HMvwPQdqfiA

கனவில் வந்தாய்!  - வ.ந.கிரிதரன் -

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

Sunday, August 4, 2024

எண்ணம் நிறைவேறும் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இது ஒரு காதல் பாடல். காதலர்கள் உரையாடுவது போன்று அமைந்த பாடல். ஆண், பெண் குரலை வேறு படுத்திக் காட்டுவதில் SUNO சிரமம் தருகின்றது. நண்பர்களே! ஆணும், பெண்ணும் இணைந்து பாடுகையில்; , குரல்களை வேறுபடுத்திப் பாடலை SUNO மூலம் இலகுவாக உருவாக்கும் வழிகள் உள்ளனவா? அநேகமான சமயங்களில் SUNO குரல்களை மாற்றி விடுகின்றது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=xJ4HZTrBaXA

ஆண்:

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

Saturday, August 3, 2024

SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் வ.ந.கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம்.


 

பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத் தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தொகுப்புக்கு எழுத்தாளரும், திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்பிரமணியம் எழுதிய விமர்சனம் SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் ஒலி பரப்பாகியுள்ளது. அதனை ஒலி வடிவில் வழங்கியவர் நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.

சிறப்பாக எனது கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்களுக்கும், அதனைச் சிறப்பாக வாசித்த நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கும், இதற்குச் சந்தர்ப்பம் வழங்கிய SRS தமிழ் வானொலியின் 'விமர்சன அரங்க'த்துக்கும் என் நன்றி. -
விமர்சன உரையினைக் கேட்பதற்கான  இணைய இணைப்பு - 

             https://www.youtube.com/watch?v=DSLCdTHruDM

'ஒரு நகரத்து  மனிதனின் புலம்பல்'  கவிதைத் தொகுப்பினை வாசிக்க - https://noolaham.net/project/1139/113856/113856.pdf

 


 

Friday, August 2, 2024

அறிஞர் அண்ணா! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


என் ஆளுமையில் அறிஞர் அண்ணாவுக்கும் முக்கிய பங்குண்டு. வெகுசனப் படைப்புகள் -> திராவிட முன்னேற்றக் கழக எழுத்துகள் -> மார்க்சியப் புரிதல் என என் ஆளுமை பரிணாமடைந்து வந்துள்ளது. 

பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் உரைகள் இளைஞர்களை ஆட்டிப் படைத்தன. தேடித் தேடி வாசித்தோம். இளைஞர்கள் நூலகங்களை அண்ணா அறிவகம் என்னும் பெயரில் ஆரம்பித்தார்கள்.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=4CQZe3j8eQI

அறிஞர் அண்ணா!  - வ.ந.கிரிதரன் -

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

'ஏ தாழ்ந்த தமிழகமே!
எம்மைப் பிரமிக்க வைத்தது.
எம்மைச் சிந்திக்க வைத்தது.
எங்கும் நிலவிக் கிடக்கும்
ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்தது.

'எதையும் தாங்கும்  இதயம் வேண்டும்'

'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.'

'ஒன்றே குலம். ஒருவனே தேவன்'

அண்ணாவின் மொழியை மாந்திக் கிடந்தோம்.
அதில் களிவெறி கொண்டு கிடந்தோம்.

Thursday, August 1, 2024

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

- இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையை யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=h0ZL-aFAXSk

இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!  

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

Wednesday, July 31, 2024

காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -



           - இசை & குரல்: AI SUNO -

பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கவிதை. ஒரு சில மாற்றங்களுடன் பாடலாக்கப்பட்டுள்ளது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DQRDqnJPwUU

காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானது
இந்த இருப்பு கண்ணம்மா!

இவ்விருப்பும் ஒரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ கண்ணம்மா.

என்னாசை ஒன்று உள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
கண்ணம்மா, நகைக்கக் கூடும்

அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
அது நினைவிருக்கிறதா? உனக்கு.
அது நினைவிருக்கிறது எனக்கு கண்ணம்மா..

நாங்கள் கவிகள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

1980இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையின் கவிதைச் சோலை பகுதியில் வெளியான எனது கவிதைகளான 'சீடர்கள்' , ' எதிர்பார்ப்பு' ஆகிய இரு கவிதைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இக்கவிதை..  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2BoJqz8w87s

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும்  எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!

Tuesday, July 30, 2024

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=o3WH-tw_A4Q

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை!  - வ.ந.கிரிதரன் -
 
மனத்தில்  தெரிகிறது.
மொக்கங் கடை
யாழ்ப்பாணத்தின்
மொக்கங் கடை

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாணமண்ணின்
மொக்கங் கடை.

கொத்து ரொட்டியென்றால்
எமக்கு
மொக்கங் கடை தானே.

மொக்கன் கடை என்றே
மக்கள் அழைப்பர்.
எனக்கோ அது என்றுமே
மொக்கங் கடை.

மொக்கங் கடை என்றே
முகப்பு விளம்பரத்தில்
பார்த்த நினைவு.

நினைவு பொய்யோ
நினைவு மெய்யோ
நிலைத்து விட்டது
நினைவில் மொக்கங் கடை
என்றே.
என் நினைவில்
மொக்கங் கடை
என்றே.

யாழ்ப்பாண ஐந்து சந்திக்கு
அண்மையில் ஒரு தெரு.
அங்கு அமைந்திருந்தது
அந்த மொக்கங் கடை.

ஓராயம் என்றோர் ஒளிர் திட்டம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

[பெருந்தொற்றுக் காலத்தில் எழுபதுகளில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எண்ணங்களில் உதித்த திட்டம் ஒராயம் திட்டம் . அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - https://oraayam.org ]

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=Ws3c8PTMP20

ஓராயம் போல் வருமா? இங்கு ]
ஓராயம் போல் வருமா?

ஊர்நலம் நாடி உருவான
ஓர் ஒளிர் திட்டம்
ஓராயம். திட்டம்,
ஓராயம் திட்டம் .

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

Monday, July 29, 2024

சமநீதி பிறக்கட்டும் எங்கும். - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=EAbi7zZI9t0

 சமநீதி பிறக்கட்டும் எங்கும்!

சமநீதி இல்லையேல் அநீதியே.
சமநீதி எங்கும் இருந்தால்
வர்க்கப் பிரிவுகள் மறையும்.
வர்ணப் பிரிவுகள் மறையும்.

ஆண், பெண் பிரிவுகள் ஒழியும்,
அனைத்துப் பிரிவுகளும் ஒழியும்,.
பிரிவுகள் நீங்க வேண்டுமானால்
பிறக்கட்டும் இங்கு சமநீதி.

சமநீதி பிறக்கட்டும் எங்கும்.
சமைத்திடுவோம் சமநீதி உலகை.
அமைத்திடுவோம் அன்புமிகு வாழ்வை.
அனைவரும் எழுக, உறுதி கொள்க.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா. - வ.ந.கிரிதரன் -


 


- இசை & குரல்; AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iMsm8VIEsSY

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

எதை நீ கேட்டாலும்
எதை நீ வாசித்தாலும்
அதை நீ அப்படியே
நம்பி விடாதே நண்பா.
நம்பி விடாதே நண்பா.

பகுத்தறிந்து பார்  முதலில்.
பின்பு முடிவு செய் நண்பா.
பகுத்தறிவு சரி பிழை காட்டும்.
பகுத்தறிவு உண்மை  பொய் காட்டும்.
பகுத்தறிவு ஏற்றம் தரும். இங்கு
பகுத்தறிவு மாற்றம் தரும்.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே - வ.ந.கிரிதரன்



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையான 'அறிந்தால் அறிவியடி அருவியே!' என்னும் கண்ணம்மாக் கவிதை இங்கு 'அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே' என்று கண்ணாக் கவிதையாக மாற்றம் பெற்றுள்ளது. . யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=dU8drlIPfLY

கண்ணா!
அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடா நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடா.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணா

கண்ணா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடா!

அறிந்தால் அறிவியடி அருவியே! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=jYECMABfJno


கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!

கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!

இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.

நகரைச் சுத்தமாக்குவோம். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SfMaqvmYcPs
    
நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.

குப்பை கூளங்கள் போடாதீர்.
கிருமிகள்  பெருகிடச் செய்யாதீர்.
எப்பொழுதும் சுத்தமாக நகர்தனை
வைத்திருப்போம். நாம் வைத்திருப்போம்.

சூழலைப் பாதுகாப்போம். நாம்
சூழலைப் பாதுகாப்போம்.
சூழற் பாதுகாப்பு வாழ்வைச்
சீரமைக்கும், நலமாக்கும்.

யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில்  கேட்க - https://www.youtube.com/watch?v=zw_bRYpmaNw

யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.

என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,

இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

வாரத்தில் பல தடவைகள் அங்கு செல்வேன்.

நான் வணங்கும் ஆலயங்கள்
நூலகங்களே.

யாழ் பொதுசன நூலகமும்
வாழ்வில் நான் வணங்கும்
ஆலயங்களில் ஒன்று.

வீணையும் கையுமாக வாசலில்
வரவேற்கும் சரஸ்வதி சிலை.
காற்று சிலு சிலுக்கும் சூழல்.
கனிவு மிகு உணர்வொன்றில்
இனிமையை உணர்வோம்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

நூலகம் என் ஆசான்.
நூலகம் என் நண்பன்.
நூலகத்தில் படித்த நூல்கள்.
நினைவில் நிலைத்து நிற்கின்றன.

பெளதிகத்தின் வரலாறு.
பறவைகளின் வரலாறு.
நீங்களும் விஞ்ஞானிகள் ஆகலாம்.
வாசித்து
நாங்களும் விஞ்ஞானிகள் ஆவோம்.

அறிவியல் நூல்கள் பற்பல.
அறிவியல் நூல்கள்  பற்பல.

அனைத்தையும் வெளியிட்டது
அன்று சென்னயின் பதிப்பகம்
ஒன்று.

கல்கியின் பொன்னியின் செல்வன்,
கள்வனின் காதலி, அலையோசை
சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்,
சாண்டில்யனின் கடல் புறா
சிந்திக்க வைக்கும் போரும் அமைதியும்
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
வாண்டுகள் எம்மை மகிழ்வித்த
வாண்டுமாமாவின் சிறுவர் நூல்கள்

பல நூல்கள். இப்படிப்
பல நூல்கள்.

எப்படி நான் மறப்பேன்.
எப்படி நான் மறப்பேன்.

அருகில் முற்றவெளி.
அதனருகில் பண்ணைக் கோட்டை.
சிறிது தொலைவில்
சுப்பிரமணியம் பூங்கா.
திறந்த வெளி அரங்கு.
தந்தை செல்வா நினைவுத்  தூபி.

நடுவில் அமைந்திருக்கும் நூலகம்.
நான் வணங்கும் நூலகம்.

நூலகம் எரிந்த நாட்கள்.
நான் நிலை குலைந்த நாட்கள்.

இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை.
வரலாற்று ஆவணங்கள்.
வரலாற்றுச் சுவடிகள்.

நூலகத்தை நினைக்கையில்
நெஞ்சில் பற்பல உணர்வுகள்.
 
என்றும் என் ஆசான் நீ.
என்றும் என் நண்பன் நீ.

உன்னுடன் கழித்த நாட்கள்.
உன்னுடன் வளர்ந்த நாட்கள்.

நூலகமே உனக்கு என் நன்றி.
நூலகமே உனக்கு என் நன்றி.

கார்ல் மார்க்ஸ் - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=CVBQ50q7zLE


சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.

ஏழ்மை இவன் தன்
எண்ணங்களை என்றுமே
சிதைத்திட இவன்
சிறிதும் இடம் கொடுத்ததில்லை.

Sunday, July 28, 2024

அறிவுரை கூறு கண்ணா! - வ.ந.கிரிதரன் -

                                                            - இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=OXVWT6wJBhQ

காதல் வயப்பட பெண் ஒருத்தியின் உணர்வுகளை விபரிக்கும் கவிதை இது.

அறிவுரை கூறு கண்ணா!  - வ.ந.கிரிதரன் -

உன்னை மறப்பதற்கு முடியவில்லை.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

எத்தனை தடவை முயற்சி செய்தேன்.
அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரே.
கண்ணா,
விழலுக்கு இறைத்த நீரே.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI மனத்தை மயக்கும் இந்தநிலா! உயரத்தில் தெரியும் இந்தநிலா. துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா. வந்தியத் தேவன் ...

பிரபலமான பதிவுகள்