Saturday, August 31, 2024

வ.ந.கிரிதரன் பாடல். என்னை மாற்றிய உன் வரவு!


இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI -

என்னை மாற்றிய உன் வரவு!

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

காதல் உணர்வு படைப்பின் அற்புதம்.
காலம் கடந்தும் நிலைக்கும் காவியம்.
பொருள் உலகில் மருள் நீக்கும்
அரும் பெரும் ஓருணர்வு அதுவாகும்.

உன்னை முதல் பார்த்த நாளை நினைக்கின்றேன்.
என்னை மறந்தே இன்பத்தில் திளைக்கின்றேன்.

Friday, August 30, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - தாழ்வு தவிர்போம்!



- இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI -

தாழ்வு தவிர்போம்!

வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றாள்.
மானமுள்ள மனிதருக்கு அவ்வை அன்றே.
மதி தாழ்த்தும் எவற்றையும் தவிர்ப்போம்.
மண்ணில் வெற்றி நிச்சயம் குவிப்போம்.

வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும்.
தாழ்வு மனப்பான்மை தவிர்த்திட வேண்டும்.

Thursday, August 29, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காதல் செய்வீர்!


                                                    இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

 காதல் செய்வீர்!

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

ஆடி அசைந்து செல்லும் நதி.
அதுபோல்தான் வாழ்வில் காதல் நதியும்.
கூடி இன்பம் உயிர்கள் அடைய
காதல் நதியும் கரைபுரண்டு பாயும்.    

காதல் ஒளியில் ககனம் வெளிக்கும்.
காதல் ஒளியில் அன்பு சுடரும்.

Wednesday, August 28, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இணைந்து வாழ்வோம்.



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=TZNTRdlr6_M

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

மல்லிகை, முல்லை, தாமரை என
மலர்கள் இருப்பது மகிழ்வினைத் தரும்.
மா, முதிரை, பாலை என
மரங்கள் இருப்பதும் பயனைத்  தரும்.

வேற்றுமை என்பது பிரிவினை அல்ல.
ஒற்றுமையின் வலிமையினை எடுத்துச் சொல்ல.

Monday, August 26, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.


இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையைப் பேணுவோம். 


இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

என்னை மறப்பதில் புத்துணர்வு ஊறுமே.
தன்னை மறப்பதில் பெருகுவதும் இன்பமே.
இருப்பைக்  களிப்புடன் தொடர வைக்கும்
இயற்கையை எப்பொழுதும் விரும்புவேன் நான்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

வ.ந.கிரிதரனின் பாடல்: காலையின் வருகை.



  இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

காலையின் வருகை!

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

எங்கும் புத்துணர்ச்சி. எதிலும் புத்துணர்ச்சி.
பொங்கிப் பெருகும் புத்துணர்ச்சி எங்கும்.
காலையின் பண்பு புத்துணர்வு ஆகும்.
நாளைத் தொடங்குவதற்கு நல்கும் செயலாகும்.

காலைக் கதிரொளி கிழக்கில் தெரியும்.
நாளின் பிறப்பை நமக்கு எடுத்துரைக்கும்.

வ.ந.கிரிதரன் பாடல் - மழை போல் பொழிவோம்!


- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SWvb2fkyxa4

 மழை போல் பொழிவோம்!

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

சட்டச் சடவெ\ன்றே சப்திக்கும்
ஓட்டுக் கூரையின் ஓசையிலே
கட்டுண்டு கிடந்திடுவேன் அப்போது.
களிதரும் பொழுது அதுவாகும்.

மழை பொழியும் இரவென்றால்
மகிழ்ச்சியில் ஆழ்வேன் எப்பொழுதும்.

Sunday, August 25, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.


                                           - இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zrIMuysVSN0

தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

ஆகாயம் பார்த்து நிற்கும் பொழுதுகள்
ஆகர்சிப்பவை என்னை எப்போதும் எப்போதும்.
விரிவெளியில் என்னிருப்பு எவ்விதம் இவ்விதம்?
விடைநாடி வினாக்கள் எழும் பொழுதுகள்.

தனிமைப் பொழுதுகளில் இனிமை காண்போம்.
தர்க்கம் செய்வோம். ஞானம் பெறுவோம்.

வ.ந.கிரிதரன் பாடல் - வாழ்க்கை எனும் சதுரங்கம்!

 


- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

வாழ்க்கை எனும் சதுரங்கம்!

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

Saturday, August 24, 2024

'கலைக்கதிர்' வெளியிட்ட அறிவியல் நூல்கள்! - வ.ந.கிரிதரன் -



 
என் இளமைப்பருவத்தில் நான் யாழ் பொதுசன நூலகத்தில் இரவல் பெற்று பல அறிவியல் நூல்களை வாசித்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் அறிவியல்  கட்டுரைகளைத் தாங்கி வெளியான கலைக்கதிர் சஞ்சிகையினையும் விரும்பி வாசித்திருக்கின்றேன்.  கோவையிலிருந்து ஜி.தாமோதரன் என்னும் பொறியியலாளர் வெளியிட்ட சஞ்சிகை.  பல தசாப்தங்களுக்குப் பின்னர் நினைவு கூர்கையில் எனக்கு அன்று வாசித்த அறிவியல் நூல்களை வெளியிட்ட பதிப்பகத்தின் பெயர் சரியாக நினைவுக்கு வராமலிருந்தது. அக்காலகட்டத்தில் சென்னையிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த சைவ சித்தாந்த நூற் பதிப்பகத்தினரும் பல மேனாட்டு செவ்வியல் படைப்புகளைச் சிறுவர்களுக்கேற்ற வகையிலான மொழிபெயர்ப்பு நடையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

இந்தக் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கிட்டியது. அன்று நான் வாசித்த பெரும்பாலான அறிவியல் நூல்களை வெளியிட்டது கலைக்கதிர் நிறுவனமே, அண்மையில் பழைய கலைக்கதிரொன்றினை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தபோது அப்பிரதியில் அவர்கள் வெளியிட்ட நூல்கள் சிலவற்றின் பட்டியலைப் பார்த்தபோதே இவ்விதம் இதனை அறிய முடிந்தது.

நாவல்: அமெரிக்கா! - வ.ந.கிரிதரன் -


                                                                               - ஓவியம் - AI -

- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது).மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இது இந்நாவலின் திருத்தப்பட்ட பதிப்பு.- வ.ந.கிரிதரன் -

அத்தியாயம் ஒன்று: இளங்கோவின் பயணம்!

உலகப்புகழ்பெற்ற நியூயார்க் மாநகரின் ஒரு பகுதி புரூக்லீனின் ஓர் ஓரத்தே, கைவிடப்படும் நிலையிலிருந்த , பழைய படையினரால் பாவிக்கப்பட்ட கட்டடத்தின் ஐந்தாம் மாடி. அந்தக்கட்டடத்திற்கு எத்தனை மாடிகள் உள்ளன என்பதே தெரியாது. எனக்குத்தெரிந்ததெல்லாம் நான் இருந்த கட்டடத்தின் பகுதி ஐந்தாவது மாடி என்பது மட்டும்தான். என்னைப்பொறுத்தவரையில் இந்த ஐந்தாவது மாடி அமெரிக்காவைப்பொறுத்தவரையில் இன்னுமோர் உலகம். 'ஒய்யாரக்கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளேயிருப்பது ஈரும், பேனும்' என்பார்கள். எனது அமெரிக்கப்பிரவேசமும் இப்படித்தான் அமைந்து விட்டது. உலகின் செல்வச்செழிப்புள்ள மாபெரும் ஜனநாயக நாடு! பராக்கிரமம் மிக்க வல்லரசு! இந்த நாட்டில் காலடி எடுத்து வைக்கும் மட்டும் எனக்கு அமெரிக்கா ஒரு சொர்க்க பூமிதான். மனித உரிமைகளுக்கு மதிப்புத்தருகின்ற மகத்தான பூமிதான். ஆனால், என் முதல் அனுபவமே என் எண்ணத்தைச்சுட்டுப்பொசுக்கி விட்டது. ஒரு வேளை என் அமெரிக்க அனுபவம் பிழையாகவிருக்குமோ என்று சில வேளை நான் நினைப்பதுண்டு. ஆனால் மிகுந்த வெற்றியுடன் வாழும் என்னினத்தைச்சேர்ந்த ஏனைய அமெரிக்கர்களை எண்ணிப்பார்ப்பதுண்டு. உண்மைதான்! பணம் பண்ணச்சந்தர்ப்பங்கள் , வெற்றியடைய வழிமுறைகள் உள்ள சமூகம்தான் அமெரிக்க சமூகம். ஆனால் அந்தச் சமுதாயத்தில்தான் எனக்கேற்பட்ட அனுபவங்களும் நிகழ்ந்தன என்பதையும் எண்ணித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது. சுதந்திரதேவி சிலை நீதி, விடுதலை, சம உரிமையை வலுயுறுத்துகிறது. அமெரிக்க அரசியலமைப்பும்  மனிதரின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்துகிறது.  இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. வெளியிலிருக்கும் மட்டும் அப்படித்தானிருந்தது. எல்லாம் உள்ளே வரும் மட்டும்தான்.

Friday, August 23, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - ஒட்டகங்கள்!




- இசை & குரல்: AI | ஓவியம்: AI -

ஒட்டகங்கள் நாங்கள். பாலையில் பயணிக்கும்
ஒட்டகங்கள் நாங்கள்.

நாளை என்ற பயணம் நாடி
வசந்தத்தை நாடித்  தொடரும் பயணம்
எங்கள் பயணம்.  எங்கள் பயணம்.

துன்பப் புயற் காற்றுகள் வீசும்.
தேகங்கள் சீர் குலைந்து விடுவதில்லை.
உறுதி குலைந்து போவதும் இல்லை.

Thursday, August 22, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: படைப்பும், விடை தேடும் நெஞ்சும்.


                                           - இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -


படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

யார் படைத்தார் பேரண்டமிதை.
பார்த்தால் பிரமிக்க வைக்கும்
பேரண்டத்தை யார் படைத்தார்?
யார் படைத்தார்? ஏன் படைத்தார்?

நுண்ணியதிலும் நுண்ணியதான குவாண்டம்
உருப்பெருக் காட்டிகள் இல்லையெனில்
உள்ளவற்றைப் -பார்க்க முடியாது.
உள்ளவற்றை உணர முடியாது.

படைப்பின் அற்புதத்தில் பேரழகில்
எனை மறக்கின்றேன் எப்பொழுதும்.

பெருந் தொலைவுகள் விரிந்திருக்கும்
பிரபஞ்சப் புதிர்களை அறிவதற்கு,
அருகில் உள்ளதுபோல் காட்டும்
தொலைக் காட்டிகள் தேவையாகும்.

Tuesday, August 20, 2024

Poem: Wake up, super human! By V.N.Giritharan


                                                                 
Drawn by AI

This is the translation of my Tamil poem written in the eighties, later published in Thayagam (Canada) and in e-magazines Pathivukal and Thinnai. It is also included in my first anthology of poems published by Mangai Pathippagam.

Poem: Wake up, super human!  By V.N.Giritharan

Concrete! Concrete! Concrete!

Walls! Radiating heat and burning with intensity,
The smooth, deceptive white surfaces.

Sidewalks of cement that wear a mocking grin.

Spaces lie entranced, embraced by fearless pillars.

In the filtration of air currents,
Flowing warm rays.
In the playful laughter of frost droplets,
The chill sweeps through,
Amid the sweetness of dreams about meadows,
Underneath the blue canvas,
Lie the sorrowful memories
Of the cold earth mother.

வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?



                                             - இசை & குரல் - AI Suno | ஓவியம் - AI

இக்கவிதை தாயகம் (கனடா) பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியான கவிதை. எண்பதுகளில் என் குறிப்பேட்டில் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளில் ஒன்று. கனடாவில் மங்கை பதிப்பக வெளியீடாக வெளிவந்த  'எழுக அதிமானுடா' என்னும்  எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று.

வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? 

Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!


                                           - இசை  & குரல் - AI SUNO | ஓவியம்: AI -

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'"  கவிதையும் இடம் பெற்றுள்ளது.

வ.ந.கிரிதரன் பாடல்: நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'!

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்!



- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=r-iEJwSfg5Q

செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.

செயற்கை அறிவுத் தொழில் நுட்பம்
இயற்கை அல்ல என்பர் சிலர்.
செயற்கைக்குள் வாழ்வைத் தள்ளும்
இயற்கையாக வாழுங்கள் என்பர் அவர்.

தொழில் நுட்பம் எது என்றாலும்
தொழிலை மேம்படுத்தும் தன்மை மிக்கதே.
புதியனவற்றை ஏற்பதும், பயன் பெறுவதும்
புதிய விடயம் ஒன்றும் அல்லவே.

செயற்கைத் தொழில் நுட்பம்
செயற்கரிய செய்யும் தொழில் நுட்பம்.

Monday, August 19, 2024

வ.ந.கிரிதரன் பாடல் : ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்!



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HSFigDG3ESU

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

மணியத்தின் ஆர்டிஸ்ட் மணியத்தின்
மக்கள் திலகத்தின் கட் அவுட்டுகள்
எம்மை மகிழ்வித்த காலமது.
எண்ணிப் பார்த்தால் மகிழ்வுதான்.

வாத்தியாரின் புதுப் படமென்றால்
வாண்டுகள் எங்களுக்கோ கொண்டாட்டம்தான்.
முதல் நாளிரவே காட்சி தொடங்கிவிடும்.
முண்டியடித்தபடி வாத்தியார் இரசிகர்கள்.

ஆர்டிஸ்ட் மணியத்தின் கட் அவுட்டுகள்
ஆடிட வைக்கும். பாடிட வைக்கும்.

Sunday, August 18, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: தமிழும் திராவிடமும்!



                                                            இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=gz9j9nQQpJU

தேவநேயப் பாவாணரின் நூல்: திரவிடத்தாய்

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

வ.ந.கிரிதரன் பாடல்: அதிகாலைக் கனவில் வந்தாய்!



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=PNeexMOQYoM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

Saturday, August 17, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: தாயே!


வ.ந.கிரிதரன் பாடல்: தாயே!

- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI -

வ.ந.கிரிதரன் பாடல்: தாயே!

தாயே! என்னிருப்பில்
உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?

நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ?

வ.ந.கிரிதரன் பாடல்; எண்ணம் நிறைவேறும் -



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=BSXPVJWeLhE

வ.ந.கிரிதரன் பாடல்; எண்ணம் நிறைவேறும் -

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

உண்மை உறவு கலைவதில்லை.
உண்மை உறவு குலைவதில்லை.
உண்மை என்னை நம்பு. அன்பே!.
உண்மை என்னை நம்பு.

அன்பே.
அந்த நம்பிக்கையில் வாழ்கின்றேன்.
இந்தப் பிறப்பில் நீயே என் துணை.
எந்தப் பிறப்பிலும் நீயே துணை எனவே
சொந்தம் தொடரவே மனம் விரும்புகிறேன்.

Friday, August 16, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=L4gHGEj649U

யாழ் மண். பிரியம் மிகு
யாழ் மண்ணே.
உணர்வுடன் கலந்த யாழ் மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

நான் பிறந்த மண் நீ.
நான் தவழ்ந்த மண்.
நான் உருண்டு , புரண்ட மண் நீ.
நான் எழுந்த மண் நீ.
நான் இளமைக்கனவு கண்ட மண் நீ.
என் இனிய யாழ் மண்ணே!
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

சிறுகதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! - வ.ந.கிரிதரன்

 


                                                      ஓவியம் -  chatGPT AI

[இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட ‘அமெரிக்கா’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. எஸ்.போ மற்றும் இந்திரா பார்த்தசாரதியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ‘பனையும் பனியும்’ சிறுகதைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது. இச்சிறுகதை தாயகம் (கனடா) பத்திரிகையில் முதலில் வெளியானது. பின்னர் பதிவுகள், திண்ணை இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளது. எனக்குப் பிடித்த எனது சிறுகதைகளில் ஒன்று. பத்திரிகைகள் பலவற்றில் மீள் பிரசுமான கதை. சிறுகதை.காம் தளத்திலும் இடம் பெற்றுள்ள எனது கதைகளில் ஒன்று. ]

ஞாயிற்றுக் கிழமையாதலால் ‘றோட்டி’னில் அவ்வளவு சனநடமாட்டமில்லை. வாகன நெரிச்சலுமில்லை. பொன்னையாவின் ‘கொண்டா அக்கோர்ட்’ ‘சென்ற்கிளயர்’ மேற்கில் ஆறுதலாக ஊர்ந்துகொண்டிருக்கின்றது. ஞாயிற்றுக் கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் காரோடுவதென்றால் பொன்னையாவிற்கு மிகவும் பிடித்தமானதொன்று. எந்தவித ‘டென்ஷ’னுமின்றிப் பின்னால் ‘ஹோர்ன்’ அடிப்பார்களேயென்ற கவலையேதுமின்றி ஆறுதலாக நகரை ரசித்துச் செல்லலாமல்லவா? இருந்தாலும் அண்மைக்காலமாகவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘ஹோர்ன்’ அடிக்கத்தான் தொடங்கி விட்டார்கள். நகரம் பெருக்கத் தொடங்கி விட்டது. ‘நகரம் பெருக்கப் பெருக்க சனங்களும் பொறுமையை இழக்கத் தொடங்கிட்டாங்கள் போலை’ இவ்விதம் இத்தகைய சமயங்களில் பொன்னையா தனக்குத்தானே சொல்லிக் கொள்வான். ‘நகரம் வளருகின்ற வேகத்திற்குச் சமனாக சனங்களின்ற வாழ்க்கைத்தரமும் உயரவேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினைதான்’ என்றும் சில வேளைகளில் ஒருவித தீவிர பாவத்துடணும் அவன் சிந்தித்துக் கொள்வான்.

‘ஓல்ட்வெஸ்டன்’ றோட்டைக் கடந்து ‘கீல் இண்டர்செக்ஷ’னையும் கடந்து கார் விரைந்தது. இடப்புறத்தில் ‘கனடாபக்கர்ஸி’ன் ‘ஸ்லோட்டர்’ ஹவுஸ்’ பெரியதொரு இடத்தைப் பிடித்துப் ப்டர்ந்திருந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கில் மாடுகளைத் துண்டு போடும் பெரியதொரு கசாப்புக்கூடம்.

வ.ந.கிரிதரன் பாடல்: எண்ணிம நூலகம் 'நூலகம்'


 இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=mOxmNszsNuc

வ.ந.கிரிதரனின் பாடல்கள் அனைதையும் கேட்க - https://www.youtube.com/@girinav1

நூல்கள் இன்பமூட்டும் இலக்கியப் படைப்புகள் மட்டுமல்ல. ஒரு காலகட்ட வரலாற்றை, பண்பாட்டை, மானுடச் சமூக வாழ்வை எடுத்துரைக்கும் வரலாற்று ஆவணங்களும் கூட. இன்று எண்ணிமப் பிரதிகளாக எழுத்துப் பிரதிகள் காலத்தின் சிதைவுகளுக்குள் சிதைந்து போகாது நிலைத்து நிற்கும் தொழில்  நுட்பம் இருக்கின்றது .எண்ணிம நூலகமான 'நூலகம்' எழுத்துப் பிரதிகளை அவை நூல்களாக இருக்கட்டும், பத்திரிகைகளாக இருக்கட்டும், பல்வேறு மலர்களாக இருக்கட்டும் சேகரிக்கும் அரிய பணியினைச் செய்து வருகின்றது.

என் பால்யப் பதின்ம வயதுப் படைப்புகள் பலவற்றை நூலகத்தின் சேகரிப்பிலிருந்து என்னால் மீண்டும் பெற முடிந்தது. நூலகத்தின் சேவையைப் பாராட்டுவோம். அதற்கு ஆதரவு நல்குவோம். நூற் பிரதிகளை வழங்குவோம், நிதியினையும் அள்ளிக் கொடுப்போம். நூலகம் தளத்தின் இணையத்தள முகவரி: https://noolaham.org

வ.ந.கிரிதரன் பாடல்: எண்ணிம நூலகம் 'நூலகம்'

'நூலகம்' எண்ணிம நூலகம்.
நூலகம் வரலாற்றுப் பெட்டகம்.

நூலகம் பிரதிகளைச் சேகரிக்கும்
நல்லதொரு திட்டம் என்போம்.
நல்ல திட்டத்தை ஆதரிப்போம்.
எல்லோருக்கும் எடுத்து உரைப்போம்.

Thursday, August 15, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!


- இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nodfJ78NfbM

வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிச்சித்தனின் மடலொன்று!  


ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.

நானே  கூறுகின்றேன் விளக்கம் கண்ணம்மா!
உன்னால் புரிந்துகொண்டிட முடிந்தால்
புரிந்துகொள்.
ஏனென்றால்
இப்பிரபஞ்சத்துடனான என் உறவு
ஏன் உன் உறவும் கூடத்தான்
ஒருபோதுமே பிரிக்கப்பட முடியாதடீ.

வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....


- இசை & குரல்: AI SUNO


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=chsuvIcnPdM

வ.ந.கிரிதரன் பாடல்: பாரதியின் பாட்டென்றால்.....

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -



 இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=nfc1A2E8IdM

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.
ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள். - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

ஒரு தடவை கீரிமலை சென்றோம்.
ஒல்லித்தேங்காய் இல்லாவிட்டால் கேணியில்
நீந்த முடியாத நிலையில் நான்.
நீந்துவதில் பேராற்றல் அற்ற நிலையில் நான்.
அவனும் இன்னுமொரு நண்பனும் நீந்தினார்கள்,
அவர்கள் நீந்துவதை வேடிக்கை பார்த்து நின்றேன்.

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -





 - இசை & குரல் ; AI SUNO | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6i9fbpElLOs

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கவிதையை சில மாற்றங்களுடன் இங்கு பாவித்துள்ளேன்.


எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.

உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலோ
ஒளியாண்டுத்  தடைச் சுவர்கள்.
காலத்தின் மாய வேடங்கள்.
ஆம்!
உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.

எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.

வ.ந.கிரிதரன் பாடல்: ஆசை!


இசை & குரல்: AI Suno | ஓவியம் AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=aUz2UDDY_14


பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
பாவை இவள் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்துப் பிடித்துக் கிடந்திடுவேன்.

Wednesday, August 14, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: பாடல்: நினைவில் நிற்கும் குருமண் காடு!



- இசை & குரல்: AI SUNO | ஓவியம்:AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=wuk16gxPWJw

வ.ந.கிரிதரன் பாடல்: பாடல்: நினைவில் நிற்கும் குருமண் காடு!

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI Suno வுக்கு நன்றி ]

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!


இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iI8pBQnjS_M

வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா!  
 
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.

மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதுமுன் முகத்தில்
முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.

நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா. என்
நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா.

Tuesday, August 13, 2024

வ.ந.கிரிதரன் பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! -




- இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI Hedra

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=WnVKQLym7BQ

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.

இயற்கையின் பேரழகு.  - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUNO | ஓவியம் AI Hedra

யு டியூப்பில் கேட்க -     https://www.youtube.com/watch?v=7KTHM16LFdg



இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இருளின் மத்தியில் ஒளியென்னும்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
அதிகாலை விடிவெள்ளி என்பேன்.
அங்கு அது கோள் என்றபோதும்.
நட்சத்திரம் என்னும் சொல்லை
நான் ஒரு குறியீடாகவே
இங்கு பாவித்தேன். அறிவீர்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

வ.ந.கிரிதரன் பாடல்: ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா..



 இசை & குரல்: AI SUNO | ஓவியம் - AI Hedra

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=-WpB3D_9evI



நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

தறி கெட்டலையும் ஆழ்மனக் குதிரை.
தறி கெட்டலையும் குதிரையை
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

Monday, August 12, 2024

ஓர் உலகக் குடிமகனின் தன் நாட்டு அரசியல் பற்றிய சிந்தனைகள்... வ.ந.கிரிதரன் -


சமஷ்டி, சுயநிர்ணய உரிமை பற்றி ஜனாதிபதி வேட்பாளருடன் பேசத் தயார் என்று தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகிறது. நமது அரசியல்வாதிகள் மக்களை உசுப்பேத்திக் குளிர் காய்வதில் ஆர்வமுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தி.

தனி நாடு கேட்டு, அதாவது பிரிந்து தனி நாடு அமைப்பதற்காக நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது 2009இல். இவ்விதமானதொரு சூழலில் இலங்கையில் எந்த அரசாவது சுயநிர்ணய உரிமையினை அதாவது நாடு பிரிந்து செல்லும் நிலையினை ஏற்றுக்கொள்ளுமா? தமிழரசுக் கட்சி பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமையினைப்  பற்றி இங்கு கூறுகிறதா அல்லது தமிழர்கள் சுயமாக ஒற்றமைக்குள் இருந்தவாறே, தம் காணி, பொலிஸ் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் சுயமாக முடிவெடுக்கும் நிலை ஏற்பட வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றதா என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன்


 
                                                  ஓசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=w9bSBvRq-Zk

விண்ணைப் போன்றதொரு நூலகம் - வ.ந.கிரிதரன்

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்திருக்கும் விண் எனக்கு
விளக்கும் ஓர் ஆசான்.
இருப்பை விளக்கும் ஆசான்.
இங்குதான் சிந்தனைகள் விரிவடையும்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

விரிந்து செல்லும் விண்ணுக்கு
எங்குண்டு ஒரு முடிவு?
அன்றொரு நாள் பெருவெடிப்பில்
இன்றுள்ள விண் தோன்றியதாம்.

விண்ணைப் போன்றதொரு நூலகம்
மண்ணில் உண்டோ? இந்த
மண்ணில் உண்டோ?

Sunday, August 11, 2024

தமிழும் திராவிடமும் - வ.ந.கிரிதரன் -

 


இசை & குரல்: AI SUNO


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6tzw0IE3y-I

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

Saturday, August 10, 2024

எம்ஜிஆர் படப் பாடல்கள் - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

 - இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.  

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=c0UWw76yU0U

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஏன் என்று கூறுவேன்.
எடுத்துரைப்பேன் நான் கேளீர்.

எம்ஜிஆர் படப் பாட்டென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்.

நம்ப முடியாத உலகமிது! - வ.ந.கிரிதரன் -


 - இக்கவிதையை முழுமையாகக் கேளுங்கள். ,முடிவில் இருக்கிறது திருப்பம்.  இப்பாடல் தென்னிந்திய, மேனாட்டு 'ராக்' இசையின் கலவை.

இசை & குரல்; AI SUNO.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cFKIwGvnUM0

என் மோகம் தீர்க்க மாட்டாயா அன்பே! - வ.ந.கிரிதரன் -

நம்ப முடியாத உலகமிது. எதையும்
நம்ப முடியாத உலகமிது.

அன்பே!
உன்னைப் பார்த்ததுமே
உன் மேல் மையலுற்றேன்.
உன் கண்கள்,
உன் உதடுகள்,
உன் புன்னகை
என்னைக்  கிறங்க வைத்தன.

உன் மேல் மோகம் கொண்டேன்.
நான்
உன் மேல் மோகம் கொண்டேன்.

நான் எதிர்பார்த்த பேரழகின் பொக்கிசம் நீ
என்றெண்ணினேன்.
உன்னுடன் நட்பு கொள்ள விரும்பினேன்.
இவ்வளவு காலமும் எங்கிருந்தாய் நீ
அவ்வளவு தூரம் பிடித்திருந்தது எனக்கு.
அன்பே உன்
வனப்பு.


அன்பே!
உன்னைப் பார்த்தாலும்
உன்மேல் மையலுற்றாலும்
உன்னை நான் மோகித்தாலும்
என்னால் உன்னை அடைய முடியாது.
என்னால் உன்னை அடைய முடியாது.
அதற்கு நான் கொடுத்து வைத்தவனல்லன்.
அன்பே. கொடுத்து வைத்தவனல்லன்.

Friday, August 9, 2024

நூலகர் என்.செல்வராஜாவின் 'ஈழத்தின் தமிழ் நாவலியல் ஓர் ஆய்வுக் கையேடு' முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு! - வ.ந.கிரிதரன் -


பதிவுகள் இணைய இதழில் வ.ந.கிரிதரன் (நான்) எழுதிய குறிப்பு.


ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும், ஆய்வகமும் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கையேடு. இவ்வாய்வுக் கையேடு இலங்கைத் தமிழ் நாவல்களைப்பற்றிய முக்கியமானதோர் ஆய்வுக் கையேடு. 1856 தொடக்கம் 2019 வரையில் வெளியான நாவல்களை உள்ளடக்கிய ஆய்வுக் கையேடு இத்துறை பற்றிய ஆய்வாளர்கள் பலருக்கும் பல்வகைகளிலும் உறுதுணையாகவிருக்கும்.

இக்கையேடு  பற்றிய தனது 'நுழைவாயிற்' குறிப்பில் இக்காலகட்டத்தில் வெளியான ஈழத்தின் கணிசமான தமிழ் நாவல்களை இவ்வாய்வுக் கையேட்டில் காணலாம் என்கின்றார் நூலகர் என்.செல்வராஜா.

இந் 'நுழைவாயிற்' குறிப்பின் இறுதியில் நூலகர் என்.செல்வராஜா அவர்கள் பின்வருமாறு கூறுவார்: "ஈழத்தித் தமிழ் நாவல்கள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முனையும் அறிமுக ஆய்வாளர்களுக்கும் ஆய்வுத்துறை மாணவர்களுக்கும் இலக்கிய  ஆய்வாளர்களுக்கும் தமக்குரிய பின்புலத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள இப்பட்டியலில் உள்ள நூல்கள் உதவக்கூடும். இந்நூல் ஒரு தனிமனித முயற்சியாகும். வரையறுக்கப்பட்ட சொந்த முதலீட்டுடன் லாபநோக்கின்றி ஆய்வாளர்களின் நலன்கருதி வெளியிடப்பட்டுள்ள இந்நூலின் இருப்பினைப் பலருடனும் பகிர்ந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.'

பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -




                                       - இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI


 யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc  யு டியூப்பில் வ.ந.கிரிதரனின் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

மேற்கு நாடு நோக்கிப்  பொருள் தேடச் சென்ற கணவனைப் பற்றிய  தகவல்கள் எவையுமற்று வாடும் பெண் ஒருத்தியின் உணர்வுகள் இவை. அவள் தன் உணர்வுகளை நட்சத்திரத் தோழியரிடம் உரைக்கின்றாள். உதவும்படி கேட்கின்றாள்.

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித்  தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

Thursday, August 8, 2024

தரணித் தடாகத்தில் அன்புத்தாமரை பூக்கட்டும். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்; AI SUNO -

யு டியூப்பில் கேட்க -  https://www.youtube.com/watch?v=UeafkwtXu6Q

மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

மதம்! மொழி! இனம்! நிறம்!,
மதிப்போம் அவரவர் போக்கை. ஆனால்
மானுடரே. வேண்டாம் பிரிவினைகள்.
மானுடரே வேண்டாம் மோதல்கள்.

ஐந்து விரல்கள் நமக்கு.
அனைத்தும் அளவில் ஒன்றல்ல.
ஐந்தும் சேர்ந்தாலே பயன்.
அல்லாவிடில் பயன் என்ன?


மானுடர் வாழும் பூமி இது.
மனித நேயம் வேண்டும் பூமியிது.

Wednesday, August 7, 2024

இயற்கையின் பேரழகு. - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=syd_-1rqcL4

இயற்கையின் பேரழகு.  - வ.ந.கிரிதரன் - 


 

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இயற்கையை ஆராதிப்பதில் எப்பொழுதும் .
பெருவிருப்பு உண்டு எனக்கு.
இருப்பை மறந்து இரசிப்பேன்.
பெருவிருப்பு அத்தகையது. ஆம்.

இயற்கையின் அழகோ பேரழகு.
செயற்கையின் நிலையோ சீரழிவு.

இருளின் மத்தியில் ஒளியென்னும்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
அதிகாலை விடிவெள்ளி என்பேன்.
அங்கு அது கோள் என்றபோதும்.
நட்சத்திரம் என்னும் சொல்லை
நான் ஒரு குறியீடாகவே
இங்கு பாவித்தேன். அறிவீர்.

ஆழ் மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -


இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=RUxx8ili1gM

 

ஓவியம் AI

ஆழ்  மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள் - வ.ந.கிரிதரன் -

ஆழ்மனத்தில் அழியாத நினைவுச் சித்திரங்கள்.
வாழ்வில் பால்யப் பருவத்து நினைவுகளே.

என் பால்ய காலத்து  நண்பனை
நான் நேற்று சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின்பு
ஆண்டுகள் பல கடந்த பின்பு
நேற்றுத்தான் சந்தித்தேன் அவனை.

பதின்ம வயதுகளில் அவனுடன் கழித்த நினைவுகள்
படம் விரித்தன நெஞ்சில்.
யாழ் நகரத்தின் தெருக்களில் அவனுடன்
வாழ்வைக்  கழித்த பொழுதுகள் தெரிந்தன.

Tuesday, August 6, 2024

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்! - வ.ந.கிரிதரன் -


- ஓவியம்: AI  | இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=zNGlkKq8ZPc


கனடாவுக்குச் செல்லும் வழியில் டெல்லா எயார் லைன்ஸ் பொச்டனிலிருந்து மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால் பொஸ்டனில் அகதியாக அடைக்கலம் கோரினேன். என்னை நியு யோர்க் மாநகரிலுள்ள புரூக்லின் என்னும் தடுப்பு முகாமில் மூன்று மாதம் தடுத்து வைத்திருந்தார்கள். அது பர்றி விபரிக்கும் கவிதை இது. 

அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்கள்!  - வ.ந.கிரிதரன் -

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

அகதியாகக்  கனடா செல்லும் வழியில்
ஆகாய விமானம் , டெல்டா ஆகாய விமானம்
மொன்ரியால் ஏற்றிச் செல்ல மறுத்ததால்
மாநகர் பாஸ்டனில் அடைக்கலம் கோரினேன்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

சட்டபூர்வமாகவே அடைக்கலம் கோரினேன்.
எட்டு மணி Transit விசாவுடன் கோரினேன்.
சட்டபூர்வக் கோரிக்கையாளர் என்றால்
எட்டுமணி கடந்ததும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்.

அமெரிக்கத் தடுப்பு முகாமில்
அடியேனின் அனுபவங்களைக் கூறுவேன்.

குறிப்பேட்டுப் பதிவுகள் - களத்தில் குதித்திடு! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=oXpKNOlmVTw

இக் கவிதையை என் குறிப்பேட்டில் 14-11-1982  அன்று எழுதினேன். அன்றிருந்த, அக்காலச் சூழலின் வெளிப்பாடாக வெளிப்பட்ட என் மனத்தின் வெளிப்பாடு. -

என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுய கவுரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகர முடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினைக் குதறி எறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியின் ஒவ்வொரு துளியும்,
இளம்பரிதியின் ஒவ்வொரு கதிரும்,
விருட்சத்தின் ஒவ்வோர் இலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!

Monday, August 5, 2024

கனவில் வந்தாய்! (ஆண் குரல்) - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=5B_z5ukozpM

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

கனவில் வந்தாய்! (பெண் குரல்) - வ.ந.கிரிதரன் -


                                                           - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HMvwPQdqfiA

கனவில் வந்தாய்!  - வ.ந.கிரிதரன் -

கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.

கனவில் வந்தாய் அன்பே.  என் அதிகாலைக்
கனவில் வந்தாய்

நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.

Sunday, August 4, 2024

எண்ணம் நிறைவேறும் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இது ஒரு காதல் பாடல். காதலர்கள் உரையாடுவது போன்று அமைந்த பாடல். ஆண், பெண் குரலை வேறு படுத்திக் காட்டுவதில் SUNO சிரமம் தருகின்றது. நண்பர்களே! ஆணும், பெண்ணும் இணைந்து பாடுகையில்; , குரல்களை வேறுபடுத்திப் பாடலை SUNO மூலம் இலகுவாக உருவாக்கும் வழிகள் உள்ளனவா? அநேகமான சமயங்களில் SUNO குரல்களை மாற்றி விடுகின்றது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=xJ4HZTrBaXA

ஆண்:

எங்கோ பிறந்தாய். அன்பே! எங்கோ வளர்ந்தாய்.
இங்கு வந்தாய். என் மனம் கவர்ந்தாய்.
நேற்று வரை உன்னை அறியேன் அன்பே.
இன்றோ என்னில் பாதி.

Saturday, August 3, 2024

SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் வ.ந.கிரிதரனின் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பு பற்றிய விமர்சனம்.


 

பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத் தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தொகுப்புக்கு எழுத்தாளரும், திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்பிரமணியம் எழுதிய விமர்சனம் SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் ஒலி பரப்பாகியுள்ளது. அதனை ஒலி வடிவில் வழங்கியவர் நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.

சிறப்பாக எனது கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்களுக்கும், அதனைச் சிறப்பாக வாசித்த நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கும், இதற்குச் சந்தர்ப்பம் வழங்கிய SRS தமிழ் வானொலியின் 'விமர்சன அரங்க'த்துக்கும் என் நன்றி. -
விமர்சன உரையினைக் கேட்பதற்கான  இணைய இணைப்பு - 

             https://www.youtube.com/watch?v=DSLCdTHruDM

'ஒரு நகரத்து  மனிதனின் புலம்பல்'  கவிதைத் தொகுப்பினை வாசிக்க - https://noolaham.net/project/1139/113856/113856.pdf

 


 

Friday, August 2, 2024

அறிஞர் அண்ணா! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


என் ஆளுமையில் அறிஞர் அண்ணாவுக்கும் முக்கிய பங்குண்டு. வெகுசனப் படைப்புகள் -> திராவிட முன்னேற்றக் கழக எழுத்துகள் -> மார்க்சியப் புரிதல் என என் ஆளுமை பரிணாமடைந்து வந்துள்ளது. 

பதின்ம வயதுகளில் அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் உரைகள் இளைஞர்களை ஆட்டிப் படைத்தன. தேடித் தேடி வாசித்தோம். இளைஞர்கள் நூலகங்களை அண்ணா அறிவகம் என்னும் பெயரில் ஆரம்பித்தார்கள்.

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=4CQZe3j8eQI

அறிஞர் அண்ணா!  - வ.ந.கிரிதரன் -

சமூகத்து மூட நம்பிக்கைகளை
சுட்டெரித்தவர் அறிஞர் அண்ணா.

'ஏ தாழ்ந்த தமிழகமே!
எம்மைப் பிரமிக்க வைத்தது.
எம்மைச் சிந்திக்க வைத்தது.
எங்கும் நிலவிக் கிடக்கும்
ஏற்றத் தாழ்வுகளை எடுத்துரைத்தது.

'எதையும் தாங்கும்  இதயம் வேண்டும்'

'நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.'

'ஒன்றே குலம். ஒருவனே தேவன்'

அண்ணாவின் மொழியை மாந்திக் கிடந்தோம்.
அதில் களிவெறி கொண்டு கிடந்தோம்.

Thursday, August 1, 2024

கவிதை: இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

- இக்கவிதை 5/3/1983 அன்று என் குறிப்பேட்டில் எழுதப்பட்ட கவிதை. இக்கவிதையை யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=h0ZL-aFAXSk

இந்த மனிதர்! இந்த உலகம்! இந்தப் பிரபஞ்சம்!  

ஆ...இந்த மெல்லிய இளந்தென்றல்...
இடையில் கலந்து வருமெழில் மலர்களின்
சுகந்த நறுமணம்...
பசுமை மண்டிக் கிடக்கும் வயல்வெளிகளில்
பாடிப் பறந்திடும் வானம்பாடிகளின்
இன்ப கானங்கள்...
ஆகா! ஆகா! ஆகா!
எத்துணை இனிமையானவை!
எத்துணை இன்பமானவை!

பதுங்கிக் காடுகளில் புகுந்துவரும்
நதிப்பெண்களே!
நான் உங்களை எவ்வளவு காதலிக்கிறேன்
தெரியுமா? இளமை கொஞ்சுமுங்களெழிற்
துள்ளல் நடைகண்டு மோகத்தீயாலெந்தன்
நெஞ்சம் வேகுகின்றதே! புரியவில்லையா
பெண்களே!

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்