அண்மைக்காலமாக
முகநூலில் ஆளாளுக்குத் தம் முதற் காதலைப்பற்றி நினைவு கூர்ந்து,
இழந்ததையெண்ணிக் கழிவிரக்கம் கொள்கின்றார்களே ஏன் என்று பார்த்தால்
அண்மையில் வெளியான 96 படமே காரணம் என்று புரிந்தது. சிலர் நகைச்சுவை ததும்ப
தம் அனுபவங்களை எழுத்தில் வடித்திருந்தார்கள். அவர்களது அனுபவங்களில்
உண்மை இருப்பதால் அவர்கள்தம் எழுத்துகளும் சுவைக்கின்றன. உதாரணத்துக்கு
நண்பர் பரதன் நவரத்தினத்தின் பதிவிலிருந்து சில பகுதிகள்:
1. " .Cricket ,Football இதுவே எனது Life .இரவு வந்து படித்தால் காணும்.இந்த 3.45 பஸ்ஸை விட்டால் அடுத்த School Bus 4.30 மணிக்கு இற்கு சென் ஜோன்ஸ் ,சுண்டுக்குளி,சென்றல்,வேம்படி எல்லாம் சென்று மாணவர்களை ஏத்தி ஆடி அசைந்து வரும். சில நாட்களில் பாடசாலை முடிய நான் சற்று பிந்தி வந்தும்,பஸ் சற்று முந்தி போயும் இருக்கும் சந்தர்பங்களில் பெடி பெட்டைகளால் நிரம்பி வரும் School Bus எடுத்திருக்கின்றேன்.ஒரே கூச்சலும்,குழப்பமுமாக இருக்கும்.அதுவும் பெட்டைகள் ரைவர் கொஞ்சம் பஸ்ஸை சரித்து வெட்டினால் காணும் சரோஜாதேவி கணக்கு வீல் என கத்துவார்கள்என்ன சும்மா வெருதுகள் என்று நினைப்பேன் , அதை விட கொக்குவில் Tech மாணவர்கள் என்று வரும் இருபது வயது முதியவர்களை கண்டால் தாங்காது. இறுக்கிய பான்சும் ஒரு அகல பெல்டும் சகிக்காது. இந்த வயதில் என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு என்று தோன்றும் . அன்றும் அப்படித்தான் அரும்போட்டில் முதல் பஸ்ஸை கோட்டைவிட்டு SCHOOL BUS எடுத்த எரிச்சலில் இருக்கின்றேன் .கொக்குவிலில் Tech தாண்ட முதியவர்களும் இறங்க பஸ் கொஞ்சம் வெளித்துவிட்டது. சும்மா திரும்பி பின்னால் பார்தேன்.தோய்ந்து விரித்த தலையில் ஒரு வெள்ளை அலிஸ்பான்ட், பாடசாலை செல்லும் எமது சராசரி பெட்டைகள் மாதிரி பத்துத்தரம் துவைத்து மஞ்சள் அடித்த வெள்ளை யுனிபோமில் இல்லாது வெள்ளை வெளீர் என ஏதோ பொலிஎஸ்டர் துணியில் யூனிபோம், வெள்ளை சொக்ஸ்,டென்னிஸ் சப்பாத்து , குமுதத்தில் போன்விற்றா விளம்பரத்திற்கு வரும் சிறுமி போல் பளிச்சென்ற முகம்.அதில் ஒரு சின்ன கறுப்பு பொட்டு. அந்த பெட்டை என்னை காணவே இல்லை. நான் முதன் முதல் இப்படியும் ஒரு விஷயம் இருக்கு என்று சிறிது உணர்ந்த நாள் அன்றுதான் .எனது இறங்குமிடம் வர அதுவும் எழும்பி எனக்கு முன்னால் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து ஒரு குச்சொழுங்கையில் திரும்பி மறைந்துவிட்டது. ஏதோ என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போய்விட்டதை போல உணர்ந்தேன்.எனது வீடு மற்ற பக்கம் என்றாலும் அரை மைல் தொலைவில் இப்படி ஒரு உலக அதிசயமா?"
1. " .Cricket ,Football இதுவே எனது Life .இரவு வந்து படித்தால் காணும்.இந்த 3.45 பஸ்ஸை விட்டால் அடுத்த School Bus 4.30 மணிக்கு இற்கு சென் ஜோன்ஸ் ,சுண்டுக்குளி,சென்றல்,வேம்படி எல்லாம் சென்று மாணவர்களை ஏத்தி ஆடி அசைந்து வரும். சில நாட்களில் பாடசாலை முடிய நான் சற்று பிந்தி வந்தும்,பஸ் சற்று முந்தி போயும் இருக்கும் சந்தர்பங்களில் பெடி பெட்டைகளால் நிரம்பி வரும் School Bus எடுத்திருக்கின்றேன்.ஒரே கூச்சலும்,குழப்பமுமாக இருக்கும்.அதுவும் பெட்டைகள் ரைவர் கொஞ்சம் பஸ்ஸை சரித்து வெட்டினால் காணும் சரோஜாதேவி கணக்கு வீல் என கத்துவார்கள்என்ன சும்மா வெருதுகள் என்று நினைப்பேன் , அதை விட கொக்குவில் Tech மாணவர்கள் என்று வரும் இருபது வயது முதியவர்களை கண்டால் தாங்காது. இறுக்கிய பான்சும் ஒரு அகல பெல்டும் சகிக்காது. இந்த வயதில் என்ன படிப்பு வேண்டிக்கிடக்கு என்று தோன்றும் . அன்றும் அப்படித்தான் அரும்போட்டில் முதல் பஸ்ஸை கோட்டைவிட்டு SCHOOL BUS எடுத்த எரிச்சலில் இருக்கின்றேன் .கொக்குவிலில் Tech தாண்ட முதியவர்களும் இறங்க பஸ் கொஞ்சம் வெளித்துவிட்டது. சும்மா திரும்பி பின்னால் பார்தேன்.தோய்ந்து விரித்த தலையில் ஒரு வெள்ளை அலிஸ்பான்ட், பாடசாலை செல்லும் எமது சராசரி பெட்டைகள் மாதிரி பத்துத்தரம் துவைத்து மஞ்சள் அடித்த வெள்ளை யுனிபோமில் இல்லாது வெள்ளை வெளீர் என ஏதோ பொலிஎஸ்டர் துணியில் யூனிபோம், வெள்ளை சொக்ஸ்,டென்னிஸ் சப்பாத்து , குமுதத்தில் போன்விற்றா விளம்பரத்திற்கு வரும் சிறுமி போல் பளிச்சென்ற முகம்.அதில் ஒரு சின்ன கறுப்பு பொட்டு. அந்த பெட்டை என்னை காணவே இல்லை. நான் முதன் முதல் இப்படியும் ஒரு விஷயம் இருக்கு என்று சிறிது உணர்ந்த நாள் அன்றுதான் .எனது இறங்குமிடம் வர அதுவும் எழும்பி எனக்கு முன்னால் இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து ஒரு குச்சொழுங்கையில் திரும்பி மறைந்துவிட்டது. ஏதோ என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு போய்விட்டதை போல உணர்ந்தேன்.எனது வீடு மற்ற பக்கம் என்றாலும் அரை மைல் தொலைவில் இப்படி ஒரு உலக அதிசயமா?"