Wednesday, July 31, 2024

காலவெளிக்காட்டி வல்லுனன்! - வ.ந.கிரிதரன் -



           - இசை & குரல்: AI SUNO -

பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கவிதை. ஒரு சில மாற்றங்களுடன் பாடலாக்கப்பட்டுள்ளது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DQRDqnJPwUU

காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானது
இந்த இருப்பு கண்ணம்மா!

இவ்விருப்பும் ஒரு காலவெளிப் படம்
என்பதையுணர்வாயாயடி நீ கண்ணம்மா.

என்னாசை ஒன்று உள்ளதென்பேன்.
என்னவென்று நீ அறியின் நகைக்கக்கூடும்.
கண்ணம்மா, நகைக்கக் கூடும்

அப்போது கண்ணம்மா! அதிகாலைநேரம்.
ஆடியசைந்து நீ வந்தாய் பொழுதின் எழிலென.
அது நினைவிருக்கிறதா? உனக்கு.
அது நினைவிருக்கிறது எனக்கு கண்ணம்மா..

நாங்கள் கவிகள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

1980இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையின் கவிதைச் சோலை பகுதியில் வெளியான எனது கவிதைகளான 'சீடர்கள்' , ' எதிர்பார்ப்பு' ஆகிய இரு கவிதைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இக்கவிதை..  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2BoJqz8w87s

நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும்  எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!

Tuesday, July 30, 2024

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=o3WH-tw_A4Q

யாழ்ப்பாணத்து மொக்கங் கடை!  - வ.ந.கிரிதரன் -
 
மனத்தில்  தெரிகிறது.
மொக்கங் கடை
யாழ்ப்பாணத்தின்
மொக்கங் கடை

மறக்க முடியாத மொக்கங் கடை.
மறக்க முடியாத மொக்கங் கடை.
யாழ்ப்பாணமண்ணின்
மொக்கங் கடை.

கொத்து ரொட்டியென்றால்
எமக்கு
மொக்கங் கடை தானே.

மொக்கன் கடை என்றே
மக்கள் அழைப்பர்.
எனக்கோ அது என்றுமே
மொக்கங் கடை.

மொக்கங் கடை என்றே
முகப்பு விளம்பரத்தில்
பார்த்த நினைவு.

நினைவு பொய்யோ
நினைவு மெய்யோ
நிலைத்து விட்டது
நினைவில் மொக்கங் கடை
என்றே.
என் நினைவில்
மொக்கங் கடை
என்றே.

யாழ்ப்பாண ஐந்து சந்திக்கு
அண்மையில் ஒரு தெரு.
அங்கு அமைந்திருந்தது
அந்த மொக்கங் கடை.

ஓராயம் என்றோர் ஒளிர் திட்டம்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

[பெருந்தொற்றுக் காலத்தில் எழுபதுகளில் யாழ் இந்துக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சிலர் எண்ணங்களில் உதித்த திட்டம் ஒராயம் திட்டம் . அது பற்றிய மேலதிக விபரங்களுக்கு - https://oraayam.org ]

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=Ws3c8PTMP20

ஓராயம் போல் வருமா? இங்கு ]
ஓராயம் போல் வருமா?

ஊர்நலம் நாடி உருவான
ஓர் ஒளிர் திட்டம்
ஓராயம். திட்டம்,
ஓராயம் திட்டம் .

பெருந்தொற்றுக் காலத்தில்
உருப்பெற்ற ஒரு திட்டம்
ஓராயம் திட்டம். நல்
ஓராயம் திட்டம்.

Monday, July 29, 2024

சமநீதி பிறக்கட்டும் எங்கும். - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=EAbi7zZI9t0

 சமநீதி பிறக்கட்டும் எங்கும்!

சமநீதி இல்லையேல் அநீதியே.
சமநீதி எங்கும் இருந்தால்
வர்க்கப் பிரிவுகள் மறையும்.
வர்ணப் பிரிவுகள் மறையும்.

ஆண், பெண் பிரிவுகள் ஒழியும்,
அனைத்துப் பிரிவுகளும் ஒழியும்,.
பிரிவுகள் நீங்க வேண்டுமானால்
பிறக்கட்டும் இங்கு சமநீதி.

சமநீதி பிறக்கட்டும் எங்கும்.
சமைத்திடுவோம் சமநீதி உலகை.
அமைத்திடுவோம் அன்புமிகு வாழ்வை.
அனைவரும் எழுக, உறுதி கொள்க.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா. - வ.ந.கிரிதரன் -


 


- இசை & குரல்; AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=iMsm8VIEsSY

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

எதை நீ கேட்டாலும்
எதை நீ வாசித்தாலும்
அதை நீ அப்படியே
நம்பி விடாதே நண்பா.
நம்பி விடாதே நண்பா.

பகுத்தறிந்து பார்  முதலில்.
பின்பு முடிவு செய் நண்பா.
பகுத்தறிவு சரி பிழை காட்டும்.
பகுத்தறிவு உண்மை  பொய் காட்டும்.
பகுத்தறிவு ஏற்றம் தரும். இங்கு
பகுத்தறிவு மாற்றம் தரும்.

பகுத்தறியும் பண்பு வேண்டும் நண்பா.
பாரில் பகுத்தறியும் பண்பு வேண்டும்.

அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே - வ.ந.கிரிதரன்



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதையான 'அறிந்தால் அறிவியடி அருவியே!' என்னும் கண்ணம்மாக் கவிதை இங்கு 'அறிந்தால் அறிவியடா என் பெரு வரையே' என்று கண்ணாக் கவிதையாக மாற்றம் பெற்றுள்ளது. . யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=dU8drlIPfLY

கண்ணா!
அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடா நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடா.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணா

கண்ணா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடா!

அறிந்தால் அறிவியடி அருவியே! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்த எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதை.  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=jYECMABfJno


கண்ணம்மா! அலைக்கூம்புக்குள்
விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி.
ஆம்!

கூம்புக்காலவெளியில் நாம்
கும்மாளமடிக்கின்றோமடி.

கூம்புக்கும் வெளியேயொரு யதார்த்தம்.
நாமறியாக் காலவெளி அது கண்ணம்மா!

கண்ணம்மா! நீ இவைபற்றி என்றாவது
கருத்தில் கொண்டதுண்டா? கூறடி!

இருப்புப்பற்றி இங்கு நினைப்பதிலுண்ட
இன்பம் வேறொன்றுண்டோ கண்ணம்மா.

நகரைச் சுத்தமாக்குவோம். - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=SfMaqvmYcPs
    
நகரைச் சுத்தமாக்குவோம். வாழும்
நகரைச் சுத்தமாக்குவோம்.

குப்பை கூளங்கள் போடாதீர்.
கிருமிகள்  பெருகிடச் செய்யாதீர்.
எப்பொழுதும் சுத்தமாக நகர்தனை
வைத்திருப்போம். நாம் வைத்திருப்போம்.

சூழலைப் பாதுகாப்போம். நாம்
சூழலைப் பாதுகாப்போம்.
சூழற் பாதுகாப்பு வாழ்வைச்
சீரமைக்கும், நலமாக்கும்.

யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில்  கேட்க - https://www.youtube.com/watch?v=zw_bRYpmaNw

யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.

என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,

இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

வாரத்தில் பல தடவைகள் அங்கு செல்வேன்.

நான் வணங்கும் ஆலயங்கள்
நூலகங்களே.

யாழ் பொதுசன நூலகமும்
வாழ்வில் நான் வணங்கும்
ஆலயங்களில் ஒன்று.

வீணையும் கையுமாக வாசலில்
வரவேற்கும் சரஸ்வதி சிலை.
காற்று சிலு சிலுக்கும் சூழல்.
கனிவு மிகு உணர்வொன்றில்
இனிமையை உணர்வோம்.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

நூலகம் என் ஆசான்.
நூலகம் என் நண்பன்.
நூலகத்தில் படித்த நூல்கள்.
நினைவில் நிலைத்து நிற்கின்றன.

பெளதிகத்தின் வரலாறு.
பறவைகளின் வரலாறு.
நீங்களும் விஞ்ஞானிகள் ஆகலாம்.
வாசித்து
நாங்களும் விஞ்ஞானிகள் ஆவோம்.

அறிவியல் நூல்கள் பற்பல.
அறிவியல் நூல்கள்  பற்பல.

அனைத்தையும் வெளியிட்டது
அன்று சென்னயின் பதிப்பகம்
ஒன்று.

கல்கியின் பொன்னியின் செல்வன்,
கள்வனின் காதலி, அலையோசை
சிவராம் காரந்தின் மண்ணும் மனிதரும்,
சாண்டில்யனின் கடல் புறா
சிந்திக்க வைக்கும் போரும் அமைதியும்
டால்ஸ்டாயின் போரும் அமைதியும்
வாண்டுகள் எம்மை மகிழ்வித்த
வாண்டுமாமாவின் சிறுவர் நூல்கள்

பல நூல்கள். இப்படிப்
பல நூல்கள்.

எப்படி நான் மறப்பேன்.
எப்படி நான் மறப்பேன்.

அருகில் முற்றவெளி.
அதனருகில் பண்ணைக் கோட்டை.
சிறிது தொலைவில்
சுப்பிரமணியம் பூங்கா.
திறந்த வெளி அரங்கு.
தந்தை செல்வா நினைவுத்  தூபி.

நடுவில் அமைந்திருக்கும் நூலகம்.
நான் வணங்கும் நூலகம்.

நூலகம் எரிந்த நாட்கள்.
நான் நிலை குலைந்த நாட்கள்.

இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை.
வரலாற்று ஆவணங்கள்.
வரலாற்றுச் சுவடிகள்.

நூலகத்தை நினைக்கையில்
நெஞ்சில் பற்பல உணர்வுகள்.
 
என்றும் என் ஆசான் நீ.
என்றும் என் நண்பன் நீ.

உன்னுடன் கழித்த நாட்கள்.
உன்னுடன் வளர்ந்த நாட்கள்.

நூலகமே உனக்கு என் நன்றி.
நூலகமே உனக்கு என் நன்றி.

கார்ல் மார்க்ஸ் - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=CVBQ50q7zLE


சரித்திர வளர்ச்சியிலே
சமுதாய விதிகளைச்
சரியாக உய்த்துணர்ந்தவன்
மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ்.

ஏழ்மை இவன் தன்
எண்ணங்களை என்றுமே
சிதைத்திட இவன்
சிறிதும் இடம் கொடுத்ததில்லை.

Sunday, July 28, 2024

அறிவுரை கூறு கண்ணா! - வ.ந.கிரிதரன் -

                                                            - இசை & குரல் : AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=OXVWT6wJBhQ

காதல் வயப்பட பெண் ஒருத்தியின் உணர்வுகளை விபரிக்கும் கவிதை இது.

அறிவுரை கூறு கண்ணா!  - வ.ந.கிரிதரன் -

உன்னை மறப்பதற்கு முடியவில்லை.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

எத்தனை தடவை முயற்சி செய்தேன்.
அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரே.
கண்ணா,
விழலுக்கு இறைத்த நீரே.
என்னால் முடியவில்லை கண்ணா
என்னால் முடியவில்லை.

முகமூடிகள் உலகில் -- வ.ந.கிரிதரன்

                                                             - இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=lAkI4-J5IOU

முகமூடிகள் உலகில் -- வ.ந.கிரிதரன்

முகமூடிகள்  வாழும் பூமியிது.
முகமூடிகள்  வாழும் பூமியிது.

முகமூடிகளின் உலகில்
மரணித்து விட்டது உண்மைவ்
வன்மம் உள் வைத்து
நன்மொழி பகர்வார் வெளியில்.

முட்டாள்களும்  முகமூடிகளில்
பேரறிஞர்களே.

முகமூடிகளை நண்பரென்று
மனத்தில்
எண்ணியதுமுண்டு.
ஏமாந்து கிடந்ததும் உண்டு.

Saturday, July 27, 2024

வ.ந.கிரிதரனின் யு டியூப் சானல்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள்'




இங்குள்ள யு டியூப் தளத்தில் எனது பாடல்களை நீங்கள் கேட்டு மகிழலாம். செயற்கை அறிவு மூலம் இசையமைக்கப்பட்டு, குரல் கொடுக்கப்பட்ட பாடல்கள். இத்தொழில் நுட்பத்தை நான் விரும்புகின்றேன். இதன் ஆரோக்கியமான அம்சங்களை நான் மிகவும் வரவேற்கின்றேன்.

பாடலாசிரியர் ஒருவர் தன் பாடல்களை பல்வேறு இசை வடிவங்களில் அல்லது கலக்கப்பட்ட பல்வேறு இசை வடிவங்களீள், பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட இசை வடிவில், பல்வேறு வாத்தியங்களைப் பல்வகைகளில் கலந்து பாடல்களை உருவாக்க இத்தொழில் நுட்பம் வழி வகுக்கின்றது. அது இத்தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களில் ஒன்று.

பாரதியின் பாட்டென்றால் - வ.ந.கிரிதரன் -



    - இசை & குரல்: AI SUNO

யு டியூப்பில் கேட்க -= https://www.youtube.com/watch?v=HPU7g2yNoSI

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.  
வேறொன்றுமில்லை.

சிந்தனைத் தெளிவில், எளிமைமிகு சொல்லில்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள் என்னைச்
சிந்திக்க வைக்கும் அவன் பாடல்கள்.

பாரதியின் பாட்டென்றால் எனக்கு
பாரில் அதைவிட வேறொன்றுமில்லை.
எனக்கு.
வேறொன்றுமில்லை.

யாழ் பொதுசன நூலக நினைவுகள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=mQe0kdQxu9Y


யாழ் பொதுசன நூலக நினைவுகள்!  - வ.ந.கிரிதரன் -

யாழ் பொதுசன நூலகத்தில்
வாழ்நாளில் கழித்த பொழுதுகளை
எப்படி மறப்பேன். எப்படி மறப்பேன்.

என்றும் என்னுள் இருக்கும் நினைவுகள்,

இன்று நினைக்கையில் அங்கு
அன்று நான் கழித்த தருணங்கள்
அலையலையாக எழுகின்றன.

எப்படி மறப்பேன்.
எப்படி மறப்பேன்.

ஒன்று விட்ட அக்கா ஒருத்தியுடன்
அன்று நான் சென்றதுதான் முதல் தடவை.
எட்டி எட்டி விரைந்து நடப்பேன்.
என்னுடன் ஈடு கொடுக்க முடியாத
அக்கா கத்துவாள். அக்கா கத்துவாள்.
''ஏய் என்னடா இந்த நடை நடக்கிறே.
எட்டிப் போகாதேடா. மெதுவாப் போடா.
மூச்சு வாங்குது' என்பாள் அவள்.

Friday, July 26, 2024

ஆழ் மனக்குதிரையை அடக்கு நண்பா.. - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUNO -- 

வயலின், மிருதங்கம், புல்லாங்குழல் ஒரு குறிப்பிட்ட தென்னிந்திய  இராகம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இராகம் என்பதை உங்கள் எதிர்வினையில் எடுத்துரையுங்கள்.

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2tx9Umyqfos -

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

தறி கெட்டலையும் ஆழ்மனக் குதிரை.
தறி கெட்டலையும் குதிரையை
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.
அடக்க நீ கற்றுக்கொள் நண்பா.

நான் எண்ணங்களை நம்புபவன்.நண்பா.
நான் எண்ணங்களின் வலிமையினை நம்புபவன்.

ஆழ் மனக்குதிரையை அடக்க முயன்றால்
அது அடங்க மறுக்கும்,. முரண்டு பிடிக்கும்.
எது நீ செய்து அடக்க நினைத்தாலும்
அது எதிர்த்து நிற்கும். முரண்டு பிடிக்கும்.

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -




          - இசை & குரல்: AI SUNO

- யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=FeE8oTHqEhY

 

நான் இயற்கையின் குழந்தை. - வ.ந.கிரிதரன் -

நான் இயற்கையின் குழந்தை.
நான் இயற்கையின் குழந்தை.

இயற்கையை எப்போதும் இரசிப்பவள்
நான்.
 
இரவுவானை, அதில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களை
எத்தனை முறை இரசித்தாலும் உள்ளம் அடங்குவதில்லை.
இரவு முழுவதும் இரசித்துக் கொண்டிருக்கவும் முடியும்.
விடியும் வரை இரசித்துக் கொண்டிருந்ததும் உண்டு.

சுயமரியாதை இழக்காதே தோழா! - வ.ந.கிரிதரன்


- இசை & குரல்: AI SUNO  -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=7sTQsfrXv-o&feature=youtu.be

சுயமரியாதை இழக்காதே  - வ.ந.கிரிதரன் -

காலப்பெருங்கடலில் சிறு துளி
ஞாலத்தில் நம் இருப்பு.

சுயமரியாதை இழக்காதே  ஒருபோதும் தோழா.
சுயமரியாதை இழக்காதே ஒருபோதும்  தோழா!
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
சுய மரியாதை இழக்காதே. ஒரு போதும்
தோழா. ஒரு போதும்.

உனது நோக்கில் தெளிவிருந்தால்
உனது நோக்கில் உண்மையிருந்தால்
ஊர் கூடி எதிர்த்தாலும்
உருக்குலைந்து போகாதே.
உறுதியுடன் எதிர்த்து நில். தோழா!
எதிர்த்து நில்.
எதிர்த்து நின்றால் உன்
எதிர்காலம் ஒளிமயமாகும்.
ஆம். தோழா!
எதிர்காலம் ஒளிமயமாகும்.

Thursday, July 25, 2024

முதற் காதல் கடிதம் - வ.ந.கிரிதரன்



- இசை & குரல் : AI Suno 

ஆண் ஒருவனின் காதல் அனுபவத்தை விபரிப்பது. அவன் தன் இளமைப்பருவத்தில் எழுதிய காதல் கடிதம் பற்றியது. அதற்கு ஏற்பட்ட விளைவு பற்றி எடுத்துரைக்கின்றது. 

யு டியூப்பிக் இப்பாடலைக் கேட்க  - https://www.youtube.com/watch?v=_5GT7fiNEL0

முதற் காதல் கடிதம் - வ.ந.கிரிதரன்

நான் முதன் முதல் அனுப்பிய கடிதம்
நினைவில் இருக்கிறதா?
அன்பே. நினைவில் இருக்கிறதா?
என் அன்பே, நினைவில் இருக்கிறதா?

ஒரு காலைப்பொழுதில் கடிதம் தந்தேன்.
அன்பே, நினைவில் இருக்கிறதா?
மறு பேச்சில்லாமல் நீ கடிதம் பெற்றாய்.
உன்
முகம் பார்க்கும் சக்தியற்று நான்
ஓடி மறைந்தேன்.
நினைவில் இருக்கிறதா?
என், அன்பே உன்
நினைவில் இருக்கிறதா?

கல்லுண்டாய்ப் பயணங்கள்! - வ.ந.கிரிதரன் -




- இசை & குரல் : AI SUNO -


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=vMKKhohyGt0

கல்லுண்டாய்ப் பயணங்கள்!  - வ.ந.கிரிதரன் -

கல்லுண்டாய் வீதியில்
காலையும் மாலையும்
பயணிப்பேன்.சைக்கிளில்
களிப்பூட்டும் பயணங்கள்
என்
கல்லுண்டாய்ப் பயணங்கள்.

காற்று வீசும்.
கீழ் வானின் கதிர் உதிக்கும்.
குருவிகள் காலையை வரவேற்கும்,
வாழ்த்துப்பா இசைக்கும் பொழுது

நான் பயணத்தைத் தொடங்குவேன்.
நகர் நோக்கிய பயணம்
 யாழ்ப்பாண
நகர் நோக்கிய பயணம்.

Wednesday, July 24, 2024

மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -



இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை எனது முதலாவது கவிதைத்தொகுப்பான , மங்கை பதிப்பக வெளியீடாக கனடாவில் வெளியான 'எழுக அதிமானுடா' தொகுப்பில் உள்ளது.
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=DgKD70RyBW0

 
மேப்பிள் மண்ணின் மைந்தர்கள்! - வ.ந.கிரிதரன் -
 
பனிமழை பொழிந்து,
பாதையெல்லாம் ஒரே சறுக்கல்.
ளிரோ உடலைக்
குற்றியபடி ஒரே
குதியாட்டம்.

Toronto' மாநகரின்
அழகானதோர் அவென்யு
யூனிவர்சிட்டி அவென்யு.
அகன்ற சாலை,
அதன் நடுவே
அழகான் சிலைகள்,
நீரூற்றுகள், மரங்கள்..

காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

எனது இக்கவிதை பதிவுகள், திண்ணை இணைய  இதழ்களில் வெளியானது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=KQHxnAmKGsQ
 
காற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்!  - வ.ந.கிரிதரன் -
 
விண்ணில் புள்!
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!

புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.

அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.

இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை 
அவை கையாளும் இலாவகம்!

எத்துணை அறிவு!

புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்…
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?

கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUNO -

யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=_IO-N784Mf0


கவிதை; காலவெளிச்சித்தனின் மடலொன்று!  - வ.ந.கிரிதரன் -
 
ஒளிக்கூம்புக்குள்
விரிந்து ,
சுருங்கி,
மீண்டும் விரிந்து
கிடக்குமென் அண்டம்.

அடியே! அண்டத்தில்
நீ இங்கெங்கு சென்றிடினும்
உன்னால் ஒருபோதுமே என்னிடமிருந்து
மறைந்துவிடவே முடியாதடி.

ஏனென்று கேட்கின்றாயா?
நீயே அறிந்துகொள்
நீயே புரிந்துகொள்
என்று நானுனக்குக்கூறிடப் போவதில்லை.
உன் சிந்திக்குமறிவுக்கும் வேலை
வைக்கப்போவதில்லை.

தாயே! தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்! - வ.ந.கிரிதரன் -



-


  இசை & குரல்: AI SUNO -

- அன்னையார் மறைவினையொட்டி எழுதிய கவிதை. யு டியூப்பில் கேட்க
https://www.youtube.com/watch?v=AnT3FFZBQdo


தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
உன்னிருப்பாலிருப்பின் மறுப்புதனை
உணர்த்தியெங்கு சென்றாய் ? தாயே!
எங்கு சென்றாய் ?

நினைவுக் கோளத்தினொரு
சித்தவிளையாட்டாய்
இருந்து நீ சென்றதெல்லாம்
அன்னையே! என்
எண்ணப் பறவைகளின் வெறும்
சிறகடிப்போ ?

இருந்தவிருப்பை
இதுவரை நான் இவ்விதம்
உணர்ந்தேனா ?

இருப்புணர்ந்து
புரிவதற்கு உன்னிருப்பேயொரு
காரணியாயமைந்த விந்தையென்னே!

உன்னிழல் தொடர்ந்து வரும்
குஞ்சுகளாய் வருமெமையரவணைத்தாய்.
காத்து நின்றாய்.

கவிதை: காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல் : AI SUNO -

'ஓவியா பதிப்பக' உரிமையாளரும், எழுத்தாளருமான வதிலைப்பிரபா அவர்கள் வெளியிட்டு வரும் 'மகாகவி' சஞ்சிகையின் 'திசம்பர்' 2017 பன்னாட்டிதற் சிறப்பிதழில் வெளியான எனது கவிதை. எனது 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பிலும் உள்ளது. YouTube இல் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=eb5DagT_0lA

காலவெளிப்பயணியின் நெடும் பயணம் - வ.ந.கிரிதரன் -

என் வெப்ப மண்ணை,
மேல் விரியும்
இரவுவானை,
சுடரை, நிலவை
நான் நீங்கியது
நேற்றுத்தான் போல்
நினைவில் நிற்கிறது.

இன்று நிழலமர்ந்து
நினைவு அசை போடுமொரு
மாடுமாகினேன்.

ஒட்டகமாய், மாடாய்,
நள்யாமத்து நத்தாய்,
சுமைமிகு அத்திரியாய்,
உறுமீன் தேடி
வாடி நிற்குமொரு கொக்காய்,
இரைக்காய்ப் பொறுமைமிகு
முதலையாய்,
துருவத்துக் கட்டடக்காட்டுக்
கான் உயிருமாகினேன்.

Tuesday, July 23, 2024

கவிதை; மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ? - வ.ந.கிரிதரன் -



         - இசை & குரல்: AI SUNO -

இக்கவிதை பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் உள்ள கவிதை. யு டியூப்பில் கேட்டு மகிழ -
https://www.youtube.com/watch?v=kH9QQ9Q1G_0


 

கவிதை; மின்னலே! நீ மின் பின்னியதொரு பின்னலா ?  - வ.ந.கிரிதரன் -

 உண்மையென்று ஏதேனுமொன்றுண்டா ?
கண்ணம்மா! கூறு கண்ணம்மா!

நான் பார்ப்பது,
நீ இருப்பது
இதுவெல்லாம்
உண்மையென்று
எவ்விதம் நான் நம்புவது ?
நீயே சொல் கண்ணம்மா!

நீ சொல்கின்றாய் நீ இருக்கிறாயென்று
.உண்மையாக
நீ இருக்கின்றாயென்று.
என்னை விட்டுத் தனியாக
எப்பொழுதுமே
இருப்பதாக நீ கூறுகின்றாய்.
எவ்விதம் நம்புவது.
கண்ணம்மா!
எவ்விதம் நம்புவது?

கவிதை: என் பிரியம் மிகு யாழ் மண்ணே! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல்: AI SUNO -


யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=tzyYJGwBVZY

கவிதை: என் பிரியம் மிகு யாழ்  மண்ணே!  - வ.ந.கிரிதரன் -

என் யாழ் மண்ணே!
என் பிரியம் மிகு யாழ் மண்ணே.
உணர்வுடன் கலந்த யாழ் மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும்
யாழ் மண்ணே.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
யாழ் மண்ணே நீ வாழி.
எப்படி மறப்பேன் உன்னை
எப்படி மறப்பேன். உன்னை

Monday, July 22, 2024

காலவெளி மீறிய கவிஞனடி கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -


                                                          
- இசை & குரல் - AI SUNO -


- இக்கவிதை எனது பதிவுகள்.காம் வெளியீடான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதை. பதிவுகள் இணைய இதழில் வெளியான கவிதை. -

யு டியூப்பில் கேட்டுக் களிக்க - https://www.youtube.com/watch?v=UIStyrjuX-4

கண்ணம்மா!
நேற்று -இன்று - நாளை

காலத்தின் ஒரு திசைப் பயணத்தில்
மீளுதல் சாத்தியமற்றதா?
ஆயின் 'அறிவுணர்'வுக்கு அது இல்லை.
ஆம்!
அது இல்லை.
எது?
ஆம்! அதுதான். அதுதான்.ஆம்!
அது இல்லை.

தயக்கமெதுவற்று அதனால்
தங்குதடையின்றிப்
பயணிக்க முடியும்.

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

- இசை & குரல்: AI SUMO -

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணா! - வ.ந.கிரிதரன் -

எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ள கண்ணம்மாப் பாடல்களில் ஒன்றினைக் கண்ணம்மா பாடினால் எப்படியிருக்கும் என்னும் கற்பனையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=iEj0_QOzz_o

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார்
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணா
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணா?
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணா?
சொல் கண்ணா?
சொல் கண்ணா?

நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணம்மா! - வ.ந.கிரிதரன் -



- இசை & குரல்: AI SUMO -

கவிதை; நாற்பரிமாண ஓவியத்தை இங்கு வரைந்தவர் யார் கண்ணம்மா!
- வ.ந.கிரிதரன் -


இக்கவிதை பதிவுகள் இணைய இதழில் வெளியானது, எனது பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பிலும் உள்ளடங்கியுள்ளது. பாடலில் ஒரிரு மாற்றங்களைச் செய்துள்ளேன். யு டியூப்பிலும் என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலிலும் இப்பாடலைக் கேட்டு மகிழலாம். அதற்கான இணைய இணைப்பு - https://www.youtube.com/watch?v=g-_6ddLZ2ew

விரியும் பெரு வெளி!
நாற்பரிமாண ஓவியத்தை இங்கு
வரைந்தவர் யார் கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

மேற்பரிமாண ஓவியங்கள்
மேலுமுண்டா கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பற்பலப் பரிமாண ஓவியங்கள்
பல இருப்பின் கண்ணம்மா,
சமாந்தர ஓவியங்களுக்குள்
செல்லும் வழிகள்தாமுண்டா
கண்ணம்மா!
பயணிப்பதற்கு வழிகள்தாமுண்டா
கண்ணம்மா! சொல்லம்மா!
என் கண்ணம்மா!

பெருவெளியின் விரிதல்போலென்
சிந்தை விரிவெளிதன் விரிதலில்
முகிழ்க்கும் வினாக்கள் கண்ணம்மா!
உன்னால் அறிந்திட முடிகின்றதா
கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!
சொல்லம்மா!
என் கண்ணம்மா!

கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்


 

- இசை  & குரல் - AI SUNO -

கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்

எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது இககவிதையான . "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'"  கவிதையும் இடம் பெற்றுள்ளது.

உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.

விரிவெளியில் படர்ந்து கிடக்கும்
உன் நகைப்போ ,
நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ
எனக்கொன்றும் புதியது அல்லவே.

இரவுவானின் அடுக்குகளில்
உனது சாகசம் மிக்க
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்
ஒவ்வொரு இரவிலும்,
நட்சத்திரச் சுடர்களில்,
அவற்றின் வலிமையில்
உன்னை உணர்கின்றேன்.

எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல் ; AI SUNO -

 YouTube: https://www.youtube.com/watch?v=TIRjgTtM284


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

Sunday, July 21, 2024

எனது யு டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!

 
                                 எனது யு டியூப் சானல்: வ.ந.கிரிதரன் பாடல்கள்!
                                 இணைய இணைப்பு - https://www.youtube.com/@girinav1

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு! - வ.ந.கிரிதரன் -

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=csE3biZ4O7U

பாடல்: வான் பார்க்கும் யாழ் மண்ணின் வழுக்கியாறு!  - வ.ந.கிரிதரன் -


         - இசை & குரல் - AI SUNO -


அராலிப் பாலத்தின்
அடியில்
காக்கைதீவுக் கடலுடன்
கலக்கிறது
வழுக்கையாறு.
வழுக்கியாறு.

வான் பார்க்கும் யாழ் மண்ணே.
வளம் சேர்க்கும் வழுக்கியாற்றால்
வரலாற்றுப் பெருமை உற்றாய்.
வரலாற்றுப் பெருமை உற்றாய்.

வழுக்கியாறுக்கு ஒரு
வரலாறுண்டு.
அது
தமிழர் தம் வரலாறு.
தமிழர் தம் வரலாறு.
ஆம்! தமிழர்தம் வரலாறு..

Saturday, July 20, 2024

பாடல்; யாழ் இந்து நினைவுகள் - வ.ந.கிரிதரன் -

         - இசை & குரல் - AI SUNO -
 

பாடல்; யாழ்  இந்து நினைவுகள் -  வ.ந.கிரிதரன் -


வானம் தெரியும் ஜன்னல்.பார்த்தபடி
மோனத்தில் ஆழ்ந்திருக்கின்றேன்.
ஆழ்ந்தபடி அசை போடுகின்றேன்.
அன்று நான் படித்த யாழ் இந்துவை.

யாழ் இந்துவென்றால் பல நினைவு.
யாழ் இந்துவென்றால் பல நினைவு.

விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிகள்
வலம்  வரும் நினைவுச் சுழலில்.
துடுப்பெடுத்தாட்டம்  , உதைபந்தாட்டம்
இரண்டுமே இன்பம்  தந்த
இனிய நாட்கள்.

குகன், சூரியின் ஹிட்ஸ்
வேகப்பந்து வீச்சாளன் நிருத்தானந்தன்
வசந்தன் டட்டடாங்

கீப்பர் புவிராஜசிங்கம், பாபு,
கோல் கீப்பர் தில்லை,
நீளம்  பாய்தலில்,
நீண்ட தூரம்  shot put
ஈட்டி எறிதலில்
இன்றும்
நினைவில் நிற்கும்
நரேனின் சாதனைகள்.

வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள் தொகுதி ஒன்று!


எனது இசைப்பாடல்களை 'வ.ந.கிரிதரன் பாடல்கள் (V.N.Giritharan Songs)வ் என்னும் யு டியூப் சானலில் நீங்கள் கேட்டு மகிழலாம். அதற்கான இணையத்தள முகவரி -  https://www.youtube.com/@girinav1

வ.ந.கிரிதரனின் இசைப் பாடல்கள். எனது பாடல் வரிகளை பல்வகை வாத்தியக் கருவிகளுடன், பல்வகை இசை வடிவங்களைக் கலந்து பாடல்களாக்கி உள்ளேன். இதற்காகக் குரல் தந்ததுடன், இசையமைத்துத்  தந்ததற்காகவும் செயற்கை நுண்ணறிவான 'சுனோ'வுக்கு ( AI SUNO) என் மனம் நிறைந்த நன்றி. என் பாடல்களை இன்னும் பல்வேறு நாடுகளின் இசை வடிவங்களில் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்க வேண்டுமென்பது என்  அவா.

தனது பாடல்களை இவ்விதம் பாடல்களாக்குவதற்கு இசைக்கலைஞர்கள் , பாடகர்கள் பலரின் ஒத்துழைப்பு அவசியம். அதற்கான சாத்தியம் அற்ற என்னைப்போன்ற பாடலாசிரியர்கள் இவ்விதம் இசையமைத்து பாடல்களை உருவாக்கி, பரீட்சித்துப் பார்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் உதவுகின்றது. அவ்வகையில் இத்தொழில் நுட்பத்தை ஆரோக்கியமானதொரு தொழில் நுட்பமாகவே பார்க்கின்றேன்.

எதிர்காலத்தில் உயிருள்ள உண்மை இசைக்கலைஞர்கள், பாடகர்கள் என் பாடல்களைப் பாட இப்பாடல்கள் வழி சமைக்குமென்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. அதற்கு முதற்படியாகவே செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பார்க்கின்றேன். எவ்விதம் இணையம், சமூக ஊடகங்கள் நிலைத்து நின்று விட்டனவோ அவ்விதமே இச்செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பமும் எம் மத்தியில் இனி நிலைத்து நிற்கும். பல்வகைகளீல் ஆரோக்கியமான விளைவுகளைத்  தரும்.

இதுவரை  என் சானலில் பதிவு செய்யப்பட்ட எனது பாடல்களின் விபரங்களையும், பாடல் வரிகளையும்  கீழே தந்துள்ளேன். எதிர்காலத்தில் மேலும் பல பாடல்கள் பதிவு செய்யப்படும். என் 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலுக்குச் செல்லுங்கள். பாடல்களைக் கேட்டு மகிழுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளைப்  பகிர்ந்துகொள்ளுங்கள்.

பாடல்: நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -


- இசை & குரல் : AI SUNO - 

யு டியூப்பில் கேட்டு மகிழ - https://www.youtube.com/watch?v=ibgzWOjb2Qc

நட்சத்திரத் தோழியரே அவனை அழைத்து வாருங்கள்! - வ.ந.கிரிதரன் -

 
படுக்கையில் புரண்டு கிடக்கின்றேன்.
விரிவானத்து நட்சத்திரத் தோழியரே.
தூக்கமின்றித் தவிக்கின்றேன்.
என்னவன் நினைவாலே.
என்னவன் நினைவாலே.

நீள்விழியாள் என்றெனை அழைத்தான்.
நிம்மதியாய் இரு என்றான்.
நீயின்றி நானில்லை என்றான்.
சொன்னவன் இன்று இங்கில்லை.
நெடுந் தொலைவு சென்று விட்டான்.

எங்கு சென்றான் நானறியேன்.
எந்த நாட்டில்,
எந்தக் காட்டில்
எந்த ஊரில்
தவிக்கின்றானோ நானறியேன்.

Friday, July 19, 2024

பாடல்: அது ஒரு கனாக் காலம். - வ.ந.கிரிதரன் -


                                                                    - இசை அமைப்பு & குரல்; AI SUMO -

- எம் பதின்ம வயதுகளில் யாழ்ப்பாண நகரத்துத் திரையரங்குகள் பிரதான பங்கு வகித்தன. எங்கள் சுப்பர் ஸ்டார்கள் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் தொடக்கம், ஆங்கில் படங்கள் வரை பல பார்த்தோம். மகிழ்ந்தோம். எம் சுப்பர் ஸ்டார்களுக்கு ஓவியர் மணியம் வரைந்த பிரமாண்டமான கட் அவுட்டுகளையும் மறக்க முடியாது. அவற்றைப் பற்றியதொரு நனவிடை தோய்தலே இப்பாடல்.-

 AI SUNO.

பாடல்: அது ஒரு கனாக் காலம்.  - வ.ந.கிரிதரன் -

அது ஒரு கனாக் காலம்.
அது ஒரு கனாக் காலம்.

யாழ் நகரத்துத் தெருக்களில்
வாழ்வு கழிந்த டீன் ஏஜ் நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.
களிப்பில் மூழ்கிக்
கிடந்த நாட்கள்.

அழியாத கோலங்கள் அவை.
அழியாத கோலங்கள் அவை.

Thursday, July 18, 2024

கவிதை; கறுப்பு ஜூலை - வ.ந.கிரிதரன்

கவிதை; கறுப்பு ஜூலை  - வ.ந.கிரிதரன்


                                                          - இசை & குரல்: AI SUMO -

கறுப்பு ஜூலையில் நான்
என் மண்ணை விட்டே நீங்கினேன்.
என் மண்ணை விட்டு நீங்கினேன்.

கறுப்பு ஜூலை
நாகரிகத்தின் அவமானம்.
கறுப்பு ஜூலை
பேரழிவின் சின்னம்.
கறுப்பு ஜூலை
வரலாற்றின் களங்கம்.

அன்று
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.
மனிதர் மிருகம் ஆகினர்.

கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -



[ இசை & குரல் - AI Suno |  யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=cYCHSzs3LdQ ]
 
கவிதை; இருப்பதிகாரம் - வ.ந.கிரிதரன் -
 
வானினை நிலவினை வரையினை மடுவினை
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும்
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை
மீறிட முடியா சிந்தையை மேலும்
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள்
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும்
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும்
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா?
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்?

விரியும் அண்டம் அடக்கும் அண்டம்
அதனை அடக்க மற்றோர் அண்டம்.
வெறுமை வெளியில் பொருளின் நடனம்.
இதற்குள் துளியெனக் கரையும் இருப்பு.
இதுவும் நிசமா? நிழலா? கனவா?
நனவும் கனவா? கனவும் நனவா?

கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்? வ.ந.கிரிதரன் -




                                                                              - இசை & குரல் - AI SUNO -


[இக்கவிதை எனது கவிதைத்தொகுப்புகளான 'எழுக அதிமானுடா', 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' ஆகிய தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. யு டியூப்பிலும் இக்கவிதையை நீங்கள் கேட்கலாம் - https://www.youtube.com/watch?v=_9Ilsgy2T7I ]

கவிதை: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?  வ.ந.கிரிதரன் -

Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.

வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.

தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.

Wednesday, July 17, 2024

பாடல் - குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

 

      - இசை & குரல் - AI SUNO  -

[என் குருமண்காட்டு நினைவுகள் என்னும் நெடுங் கவிதை சிறு மாறுதல்களுடன் இப்பாடலாக உருவெடுத்துள்ளது.  வவுனியா -மன்னார் பிரதான வீதியிலிருந்து (பட்டாணிச்சுப் புளியங்குளத்தினருகில்) வடக்காகச் செல்லும் வீதியிலுள்ள பிரதேசம் குருமண்காடு என்றழைக்கப்படுகின்றது. அதில்தான் என் பால்ய பருவம் கழிந்தது. அறுபதுகளில் அதுவோர் ஒற்றையடிப்பாதை. இன்றோ ஒரு நகரம். அந்த நாள் குருமண்காடு இன்று என் நினைவில் மட்டும். ரப், பொப், ரொக் என்று உருவான இசைக் கலவை இது. அதற்காக AI SUNO வுக்கு நன்றி ]

'YouTube' Link - https://www.youtube.com/watch?v=Iuy2svIdTp8&feature=youtu.be

பாடல்; குருமண் காடே. - வ.ந.கிரிதரன் -

பால்யப் பருவத்துக் குருமண் காடே!
நனவிடை தோய்கின்றேன். . நான்
நனவிடை தோய்கின்றேன்.
நனவிடை தோயவே முடியும்.
நனவிடை தோயவே முடியும்.

என் குருமண்காடு இன்றில்லை. அங்கு
என் குருமண்காடு இன்றில்லை

இயற்கையின் வனப்பில்
இலங்கிய குருமண்காடு.
நடை பயின்றேன்.

வனம், வாவி நிறைந்த குருமண்காடு.
வளமான பூமி என் குருமண்காடு.
காடு  இன்று அங்கில்லை.
அந்த வனப்பு அங்கில்லை.
அந்த வளம் அங்கில்லை.
என்று நான் காண்பேன்?
எங்கு நான் காண்பேன்?
என் நினைவுகளில் நிற்கும்
இன்னுலகம் என் குருமண்காடு.

பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -



                                                        - இசை & குரல்; AI Suno | ஓளிப்பதிவு: AI Hedra -
 
பாடலுக்கான யு டியூப் இணைப்பு - https://www.youtube.com/watch?v=TBzGdyKGqVA&feature=youtu.be
 
[என் கவிதைத்தொகுப்பிலுள்ள கவிதையான 'தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை' என்னும் கவிதையில் சில மாற்றங்களைப் பாடுவதற்கேற்ற வகையில் செய்துள்ளேன்.]
 
பாடல்: தனிமைச் சாம்ராஜ்யத்துச் சுதந்திரப் பறவை. - வ.ந.கிரிதரன் -
 
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?
 
கட்டுக்களற்ற உலகம்.
கவலைகள் இல்லை.
சட்டங்களற்ற உலகம்.
சோகங்கள் இல்லை.
ஒளித்தோழர்கள் வெட்கி
ஒளிப்பர் என் பின்னே.
பால் வீதிகளில்
பறந்து மீள்வேன்.
பெருமிதம் பொங்கும்.
 
நோக்கங்கள் விளங்கும் வாழ்வு.
தாக்கங்கள் இல்லை தானே.
ஏக்கங்கள் இல்லை தா\னே.
 
தனிமைகளின் சாம்ராஜ்யங்களில்
கட்டுண்டு கிடந்திடுவேன்.
அடிமையாகவா?
ஆண்டானாகவா?
பூரணம் நிறைந்ததொரு சுதந்திரப்
பறவையாகவா?
இசை பாடிடுமெழிற் புள்ளாகவா?

பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்


பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
ஒளிப்பதிவு: AI Hedra

  - பாடலை முழுமையாகக் கேட்க - பாடல் - ஆசை - வ.ந.கிரிதரன் =

பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.

பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.

 

பாடல்: ஆசை - வ.ந.கிரிதரன்


பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno

அர்த்த ராத்திரியில்
அண்ணாந்து ஆகாயம்
பார்ப்பேன். அகமிழப்பேன்.
அடியேனின் வழக்கமாகும்.

கருமைகளில் வெளிகளில்
கண் சிமிட்டும் சுடர்ப் பெண்கள்
பேரழகில் மனதொன்றிப்
பித்தனாகிக் கிடந்திடுவேன்.

நத்துக்கள் கத்திவிடும்
நள்ளிரவில் எனை மறந்தே
சித்தம் மறப்பேன்.
சொக்கி இருப்பேன்.

பரந்துவரும் அமைதியிலே
பரவி வரும் பல்லிகளின்
மெல்லொலிகள் கேட்பேன்.
பைத்தியமாய்ப் படுத்திருப்பேன்.

இயற்கையின் பேரழகில்
இதயம் பறிகொடுப்பேன்.
இவ்விதம் இருப்பதென்றால்
அடியேனின் இஷ்ட்டமாகும்.


பாடல்; கண்ணா! - வ.ந.கிரிதரன் -


பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno
ஒளிப்பதிவு: AI Hedra


கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.

பாடல்; கண்ணா! - வ.ந.கிரிதரன் -

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல்: AI Suno

கண்ணா,
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.

கண்ணா
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு?
எதற்காக இந்தச் சிந்திப்பு?

கண்ணா,
பொழுதெல்லாம் உன் நினைப்பு.
எழுமே நெஞ்சினில் உன் வனப்பு.
வாழ்வதெல்லாம் உனக்காகத் தானே.
வீழ்வதும் உன்னுடன் தான்.

கண்ணா,
விரிவானில் தொலைதூரம் நீந்திடுவோம்.
எரிசுடர் வெளியெல்லாம் பூந்திடுவோம்.
நட்சத்திரத் தோழருடன் ஆடிடுவோம்.
நிலவுப் பெண்ணுடன் பாடிடுவோம்.

கண்ணா,
காலம் நீயென்றால் , வெளி நானன்றோ.
வெளி நீயென்றால், காலம் நானன்றோ.
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.


Tuesday, July 16, 2024

பாடல்: நெஞ்சில் நிறைந்தாய் கண்ணம்மா - வ.ந.கிரிதரன்


 
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno


 
அதிகாலை நேரம் கண்ணம்மா
ஆடி , அசைந்து வருவாய் கண்ணம்மா.
மெல்லிருளில் தண் நிலவாக
மெதுவாக நடந்து வருவாய் கண்ணம்மா.
 
மார்புற புத்தகம் தாங்கி
மண் நோக்கி நடந்து வருவாய் கண்ணம்மா.
மண்பார்த்த போதும் உன் முகத்தில்
முகத்தில் முறுவல் ஓடிமறையும் கண்ணம்மா.
 
காதலுக்கு அர்த்தம் தந்தாய் கண்ணம்மா.
களிப்பால் உள்ளம் துள்ள வைத்தாய் கண்ணம்மா.
நினைவில் நிலைத்து நிற்பாய் கண்ணம்மா.
நெஞ்சில் நிறைந்து நிற்பாய் கண்ணம்மா.
 



நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை & குரல் : AI Suno
ஓளிப்பதிவு: AI Hedra

 

நான் பிரபஞ்சத்துக்  குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.

நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.

நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.

காலவெளிக் குழந்தை நான்.

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை: AI Suno
ஓளிப்பதிவு: AI Hedra


பாடல்: நான் பிரபஞ்சத்துக் குழந்தை - வ.ந.கிரிதரன்

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
| இசை & குரல்: AI Suno

நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவிடம் கொடுத்து, ரொக் இசை வடிவில் பாடலை உருவாக்கித் தா என்றேன். தந்தது. பிரமித்துப் போனேன்.

பாடலை முழுமையாகக் கேட்டு மகிழுங்கள்.


நான் பிரபஞ்சத்துக்  குழந்தை  - வ.ந.கிரிதரன்

நான் பிரபஞ்சத்துக்  குழந்தை
நான் பிரபஞ்சமெங்கும் அலைவேன்.
நான் பிரபஞ்சமெங்கும் திரிவேன்.
நான் பிரபஞ்சத்துக் குழந்தை.

நட்சத்திரங்கள் கண்டு மகிழ்வேன்.
நர்த்தனமிடுவேன். நகைப்பேன்.

நிலாக் கண்டு மகிழ்வேன்.
நிலவொளியில் குளிப்பேன்.
கும்மாளம்
அடிப்பேன்.

காலவெளிக் குழந்தை நான்.
காலவெளியின் பகுதி நான்.
காலவெளியாய்க்
களிப்பேன். மிகவும்
களிப்பேன்.

பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன்
இசை: AI Suno
 

Monday, July 15, 2024

இது பாட்டுக் கேட்கும் நேரம் : 'அனுபவம் புதுமை'


'காதலிக்க நேரமில்லை' தமிழ்த்திரையுலகில் நகைச்சுவை என்றதும் நினைவுக்கு வரும் படங்களில் முதலில் நிற்பது. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் திரைப்படம். இருவருமே தமிழ்த்திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ரவிச்சந்திரன் நான், இதயக்கமலம், காதலிக்க நேரமில்லை  என வெள்ளிவிழாப் படங்களைத் தந்தவர். ஒரு சமயம் குட்டி எம்ஜிஆர் என்றும் அழைக்கப்பட்டார்.
 
நடிகர் ரவிச்சந்திரன் சிங்கப்பூரிலிருந்து நடிக்க வந்தவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். 'அனுபவம் புதுமை' என்னுமிந்தப்பாடலில் அவருடன் இணைந்து நடித்திருப்பவர் ராஜஶ்ரீ. சிறந்த நர்த்தகி.
இப்பாடலை எழுதியிருப்பவர் கவிஞர் கண்ணதாசன். பாடியிருப்பவர்கள் - பி.பி.ஶ்ரீனிவாஸ் & பி.சுசீலா. இசை - மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி. 
 
உள்ளத்தை உருக்கும் காதல் கதைகளைத் திரையில் தந்த ஶ்ரீதர் அதற்குப் பிராயச்சித்தமாக அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்க தந்த முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.
இத்திரைப்படத்தில் வரும் நடிகர் நாகேஷ் , பாலையா நகைச்சுவைக் காட்சிகளை மறக்கவே முடியாது. நாகேஷ் பாலையாவுக்குக் கதை சொல்லும் காட்சியின் தாக்கத்தைச் சந்திரமுகிய்ல் ரஜனி , வடிவேலுக்குக் கதை சொல்வதிலும் காணலாம்.

இது பாட்டு கேட்கும் நேரம் : 'அன்புள்ள மான் விழியே. ஆசையில் ஓர் கடிதம்'


ஏ.வி.எம் தயாரிப்பான 'குழந்தையும் தெய்வமும்' சிறந்த தமிழ்த்திரைப்படத்துக்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் பேபி பத்மினியின் இரட்டை வேட நடிப்பு. The Parent Trap என்னும் அமெரிக்கத்திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். ஜேர்மன் நாவலான Lisa and Lottie என்னும் நாவலின் திரை வடிவம்தான் ' The Parent Trap'. கிருஷ்ணன்-பஞ்சுவின் (பஞ்சு அருணாசலமென்று தவறாக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டிய நண்பர் கணேஷ்வரன் வீரகத்திக்கு நன்றி) இயக்கத்தில் வெளியான திரைப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருப்பவர் எழுத்தாளர் ஜாவர் சீதாராமன்.

நண்பர்களுடன் ஒரு சந்திப்பு!


அண்மையில்  நண்பர்கள் ஈஸ்வரமூர்த்தி, குருபரன், யோக வளவன் ஆகியோருடன் டிம் ஹோர்டன் கோப்பிக் கடையொன்றில் சந்தித்து சுமார் மூன்று மணி நேரம் உரையாடினோம். இலக்கியம், சமூக ஊடகம், அரசியல், பாடசாலை அனுபவங்கள் எனத்தொடங்கி தமிழகத்து டீ மாஸ்டர் வரை பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது. ஈஸ்வரமூர்த்தி (சிவா முருகுப்பிள்ளை) , குருபரன் ஆகியோர் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து அறிமுகமான நண்பர்கள். யோக வளவன் எழுத்தாளர்களான வடகோவை வரதராஜன், அமரர் கோமகன் ஆகியோரின் சகோதரர். கனடாவில் அறிமுகமானவர். 
 
ஈஸ்வரமூர்த்தி, குருபரன் ஆகியோர் 84 காலகட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். ஈஸ்வரமூர்த்தி தான் பழகிய தமிழர்தம் ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தலைவர்களுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். யோக வளவன் கோமகன் நடத்திய 'நடு' இணைய இதழை மீண்டும் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
 
நண்பர்களுடனான சந்திப்புகள் எப்போதும் மகிழ்ச்சியைத் தருவன. இதுவும் அத்தகைய சந்திப்புகளில் ஒன்று.

சிவப்புச் சூரியன்!



அண்மையில் ஒரு மாலை  'ஸ்கார்பரோ டவுன் சென்டர்' சென்று திரும்புகையில் அந்தி வானில் சிவப்புச் சூரியனை அவதானித்தேன். அப்பொழுது இளைய மகளிடம் அதைப்புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.அப்போது எடுத்த புகைப்படம்.

வ.ந.கிரிதரனின் 'காலவெளி' கண்ணம்மாக் கவிதைகள் (1) - காலவெளிக் கைதிகள்!


காலவெளியை மையமாக வைத்து நான் பல கண்ணம்மாக் கவிதைகள் எழுதியிருக்கின்றேன். இவை வெறும் காதல் கவிதைகள் மட்டும் அல்ல. இருப்பு பற்றிய தேடல் கவிதைகளும் கூடத்தான். வாசித்துப் பாருங்கள். உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இக்கவிதைகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியானவை. பதிவுகள்..காம் வெளியீடாக (2023) வெளியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' என்னும் என் கவிதைத்தொகுப்பிலும் உள்ளடங்கியவை.


 

கவிதை: காலவெளிக் கைதிகள்! - வ.ந.கிரிதரன் -

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.
எப்பொழுதென்றாயினும் நீ கண்ணம்மா
எவ்விதம் அவனால் முடிந்ததென்று
எண்ணியதுண்டா ?
நான் எண்ணுகின்றேன் எப்பொழுதும் கண்ணம்மா.\
நான் வியந்துகொண்டிருக்கின்றேன் எப்பொழுதும்
கண்ணம்மா..

Friday, July 12, 2024

கவிதை; எங்கு போனார் என்னவர்? வ.ந.கிரிதரன் -


இங்குள்ள 'எங்கு போனார் என்னவர்?' என்னும் கவிதை எண்பதுகளில் மொன்ரியாலில் இருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் வெளியானது. எனது கவிதைத்தொகுப்பான 'எழுக அதிமானுடா' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
 
காணாமல் போன தன் போராளிக் கணவனை அல்லது காதலனை நினைத்து வாடுமொரு பெண்ணின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதை. காணாமல் போனவன் பகைவனுடன் மோதி போர்க்களத்தில் மாய்ந்தானோ அல்லது உட்பகையால், உடல் நலிவால் , இராணுவ முகாமில் மறைந்தானோ என்று விடை தெரியா வினாக்களுடன் துயரில் ஆழ்ந்திருக்கின்றாள் அவள்.
இக்கவிதை ஒரு விதத்தில் அக்காலகட்ட நிகழ்வுகளை, வேதனையினை ஆவணப்படுத்துக்கின்றது என்றும் கூறலாம்.

Thursday, July 11, 2024

எழுத்தாளர் அ.ந.கந்தசாமி உரையாற்றியிருந்தால்...


எழுத்தாளர் அ.ந.கந்தசாமி  மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர் சில்லையூர் செல்வராசன் இலங்கை வானொலியில் தொடர் நாடகமாக்கி ஒலிபரப்பினார். மனக்கண் நாவல் பின்னர் பதிவுகள் இணைய இதழிலும் தொடராக வெளியானது. மனக்கண் நாவல் தொடராக வெளியானபோது அமரர் ஓவியர் மூர்த்தியின் அழகான ஓவியங்களுடன் வெளியாகியது. நாவலின் முடிவில் அ.ந.க எழுதிய முடிவுரை சிறப்பானதோர் ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளிலொன்று. ஓவியர் மனக்கண் நாவலுக்குத் தீட்டிய ஓவியங்கள் சிலவற்றையும், அ.ந.க மனக்கண்  நாவலுக்கு எழுதிய முடிவுரையினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

அ.ந.க மேற்படி முடிவுரையில் கூறிய  கருத்துகளின் சில வரிகளையே இங்குள்ள காணொளியில் பேசுகின்றார். அவர் தனது 44ஆவது  வயதில் மறைந்து போனது துர்ப்பாக்கியமானது. அக்காலகட்டத்தில் இன்றுள்ளதுபோல் அலைபேசியே, ஒலி, ஒளிப்பதிவு கருவிகளோ சாதாரணமாகப் பழக்கத்தில் இல்லை. எனவே அவர் பேசுவதைக் கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் இருந்து பேசியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்ற என் அவாவின் விளைவே இக்காணொளி.

என் ஆரம்ப காலக் கவிதை முயற்சிகளும் வீரகேசரி, சிந்தாமணி & தினகரன் அமைத்துத்தந்த கவிதைக் களங்களும்!

மானுட உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முன் நிற்பது கவிதையே. அதற்கு நிகர் வேறெதுவுமில்லை. குறைந்த வரிகளில் உணர்வுகள் எவையாயினும் அவற்றை வெளிப்படுத்தக் கவிதைகளால்தாம் முடியும். என்னைப்பொறுத்தவரையில் என் கவனம் பதின்ம வயதுகளில் கவிதையின் பக்கம் திரும்பியதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்: அப்பருவத்துக்குரிய உணர்வுகளுக்குக் கவிதை வரிகள் வடிகால்களாகவிருந்தன. அடுத்து எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள்  மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. கவிதைகளில் அவற்றைக் குறைந்த வரிகளில் வெளிப்படுத்த முடிந்தன. என் எழுத்துகளில்  கவிதைகளுட்பட , நீங்கள் இம்மூவகைப்பண்புகளையும் காணமுடியும்.  இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம்.

இருப்பு பற்றிய என் ஆரம்ப காலக் கவிதையொன்று!


இங்குள்ள தோற்றத்தில் நானிருந்த வேளையிலே , 'ஆத்மாவின் கேள்வியொன்று என்னும் தலைப்பில், எண்பதுகளில் எழுதிய கவிதை வரிகள் இவை.. 16.11.1980இல்  வெளியான வீரகேசரி வாரவெளியீட்டின் உரைவீச்சுப் பகுதியில் பிரசுரமான கவிதை. 
 
 அக்காலகட்டத்தில் வெகுசனப் பத்திரிகைகள் , சஞ்சிகைகள் கவிதையின் புது வடிவமான புதுக்கவிதையின் பக்கம் தம் பார்வையைச் செலுத்தியிருந்தன. வீரகேசரி தனது வாரவெளியீட்டில் 'உரைவீச்சு' ,சிந்தாமணி 'மணிக்கவிதை' , தினகரன் 'கவிதைச் சோலை' என்னும் பெயர்களில் இவ்வகைக் கவிதைகளை வெளியிட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தன.

Wednesday, July 10, 2024

கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - வ.ந.கிரிதரன் -



இங்கு எனது அண்மையில் முகநூலில் வெளியான கண்ணம்மாக் கவிதையின் சில வரிகளைச் செயற்கை நுண்ணறிவு எவ்விதம் கையாள்கின்றதென்பதைக் காட்டும் காணொளி இது. சில இடங்களில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது. குறிப்பாக காலவெளிப்புள் என்பதில் வல்லினம் மிகும், அதில் செயற்கை நுண்ணறிவு தடுமாறி விட்டது.
 
'பல்'லென்று முறுவலித்தாய் என்பதிலும் தடுமாற்றம் கண்டேன். வ.ந.கிரிதரனை வி.என்.கிரிதரன் என்று மாற்றியதிலும் தடுமாற்றம் கண்டேன். இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு உண்மையில் என்னைப் பிரமிக்க வைத்துத்தான் விட்டது. 
 
என் சொந்தக் குரலை விட தமிழகத் தமிழரின் 'டப்'பிங் குரலும் சுவைக்கத்தான் செய்கின்றது. மோகனுக்கு சுரேந்தர் என்றால் வி.என்.ஜிக்கு Hedra'வின் Ryan!
முழுக்கவிதை வரிகளும் கீழே:
 
கவிதை: கண்ணம்மாவுடனோர் உரையாடல் காலவெளிப்புள் பற்றி... - 
 
கண்ணம்மா!
காலவெளிப்புள்!
ஆம்! நீ ஒரு புள்தான் என்றேன்.
காலவெளிபுள்தான் என்றேன்.

கவிதை: எழுக அதிமானுடா! - வ.ந.கிரிதரன் -


'எழுக அதிமானுடா!' என்னும் இக்கவிதையை எண்பதுகளில் என் குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தேன். தாயகம் (கனடா) பத்திரிகையில் முதன் முதலில் பிரசுரமானது. பின்னர் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் பிரசுரமானது. எனது 'எழுக அதிமானுடா' , 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத்தொகுப்புகளிலும் வெளியானது. எண்பதுகளில் எழுதிய கவிதையின் வரிகளை அக்காலத் தோற்றத்தில் வாசித்தால் எப்படியிருக்கும்? இப்படியிருக்கும்.

எழுக அதிமானுடா!

'காங்ரீட் '! காங்ரீட் '! காங்ரீட்' சுவர்கள்!
கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.

'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.

அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில்
மயங்கிக் கிடக்கும்
இட வெளிகள்.

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் கூறுவதென்ன?


ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் வெளி, நேரம் மற்றும் ஒளி வேகம்  பற்றிக் கூறுவதென்ன?

வெளி, நேரம் இரண்டும் சுயாதீனமானவை அல்ல. சுற்றிவர நிகழும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவை. சார்பானவை. இப்பிரபஞ்சத்தில் ஒளிவேகம் மட்டுமே சார்பற்ற ஒன்று. கால, வெளி இரண்டு பிரிக்கப்பட முடியாதவை. காலவெளி என்றே அவை எப்பொழுதும் இணைந்திருக்கும்.

கவிதை: எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -


நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும்  என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.

'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து  வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது.


எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன்  -

முகமில்லாத மனிதர்களிற்காகவும்
விழியில்லாத உருவங்களிற்காகவும்
கவிதைத் தூது விடுப்பர். ஆயின், யான்
அவர்களிற்கல்ல நண்பா! உனக்குத்தான்
அனுப்புகின்றேனிச் செய்திதனை.
உன்னை நான் பார்த்ததில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
உனக்கும் எனக்குமிடையிலோ
ஒளியாண்டுச் தடைச்சுவர்கள்.
‘காலத்தின் மாய ‘ வேடங்கள்.

Tuesday, July 9, 2024

எந்தையும் நானும்!



என் தந்தையாரை நான் என் பதின்ம வயதுகளில் இழந்து விட்டேன். ஆனால் எழுத்து, வாசிப்பு ஆர்வத்துக்கு அடிகோலியவர் அவரே. அவருடன் கழிந்த தருணங்கள் என்னால் மறக்க முடியாதவை. குறிப்பாக இரவுகளில் குருமண்காட்டில் , வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியில் அவர் சாய்ந்து நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வானை இரசித்தபடி இருப்பார். 
 
அப்பொழுதெல்லாம் அவரது சாறத்தைத் தொட்டிலாக்கி நானும் அதில் படுத்திருந்தபடி இரவு வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பற்றி, வீழும் எரி நட்சத்திரங்கள் பற்றியெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்பேன். அவற்றுக்கு அலுக்காமல், சளைக்காமல் அவரும் பதில் கூறுவார். எனக்கு வானியற்பியல் மீதான ஆர்வம் அப்போதிருந்து தொடங்கியது என்பேன்.

ஓவியம் பேசினால்...


நியூயோர்க் மாநகரத்து வீதி ஓவியர்  எண்பதுகளில் என்னைப்பார்த்து வரைந்த ஓவியம் என் பால்ய பருவத்து வாசிப்பனுபவமொன்றைப்பற்றிப் பேசினால் எப்படியிருக்கும் என்ற  கற்பனையின் விளைவு இது.

எழுத்தாளர் மாயாவியின் (எஸ். கே. இராமன்) மொழிபெயர்ப்பில்  வெளியான 'இளமைக்கனவு' (புகழ்பெற்ற அமெரிக்க நாவலான The Yearling' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. நாவலாசிரியர் Marjorie Kinnan Rawlings), எம் பால்ய பருவத்தில் இளமைக்கனவு' நாவலை நாங்கள் அனைவருமே விரும்பி வாசித்தோம். கானகச்சூழலை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த நாவல். அப்பொழுது இயற்கை வளம் மலிந்த , கானகச்சூழலில் உறங்கிக்கிடக்கும் வவுனியாவில் வாழ்ந்து வந்ததால் இந்நாவலுடன் எங்களால் மிகவும் இலகுவாக மனதொன்றிட முடிந்தது. அதனால் அவ்வாசிப்பனுபவம் இன்றும் எம் நினைவுகளில் அழியாத கோலமாக நிலைத்து நிற்கிறது,

Monday, July 8, 2024

நானே நானா? இது யாரோ தானா?


என் முகநூற் பதிவொன்றிலிருந்து சில வசனங்களை என் பதின்ம வயதில் கூறியிருந்தால், குரல் தவிர, எப்படியிருந்திருக்கும்?

கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்


எழுத்தாளர் மாலன் சாகித்திய அகாதெமிக்காக 'அயலகத் தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு -'புவி எங்கும் தமிழ்க் கவிதை' என்னும் கவிதைத்தொகுப்பினைத் தொகுத்துள்ளார். அத்தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. 22 நாடுகளில் வசிக்கும் தமிழ்க் கவிஞர்களின் 70 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது. மேற்படி தொகுப்பில் எனது கவிதையொன்றும் இடம் பெற்றுள்ளது. "நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'" என்பது அக்கவிதையின் தலைப்பு, அக்கவிதையினையே கீழே காண்கின்றீர்கள்:
 
கவிதை; நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'! வ.ந.கிரிதரன்
 
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?
ஒவ்வொரு முறையும் இவ்விதம்
நகைப்பதே உன் தொழிலாயிற்று.
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,
அல்லது உன் தந்திரம் மிக்க
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.

தொடர் நாவல்: மனக்கண் (6) - டாக்டர் சுரேஷ்! - அ.ந.கந்தசாமி -

6-ம் அத்தியாயம்: டாக்டர் சுரேஷ்  ஸ்ரீதர் “எஸ்கிமோ”வுக்கு முன்னால் பத்மாவைப் பிரிந்து டாக்ஸி மூலம் ஹோர்ட்டன் பிளேசுக்குப் புறப்பட்டவன், திடீர...

பிரபலமான பதிவுகள்