- எழுத்தாளர் டானியல் ஜீவா - |
கனடாவில் வசிக்கும் டானியல் ஜீவா எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது சிறுகதைகளிலொன்றான சந்தியா அப்பு எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று. புகலிடத்து எழுத்துகளில் காணப்படும் ஓரம்சம் கழிவிரக்கம். ஊரை விட்டு உயிர்தப்பப் புலம் பெயர்ந்தாலும், ஊர் பற்றிய நினைவுகள், அங்கு பழகிய மனிதர்கள், இயற்கைக் காட்சிகள், அங்கு அனுபவித்த வாழ்வின் நிகழ்வுகள் இவையெல்லாம் தொடர்ந்தும் நினைவில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து வரும். நினைவை வாட்டிக்கொண்டேயிருக்கும். இவ்விதமான ஓர் ஆளுமைதான் கதை சொல்லியைப்பொறுத்தவரையில் சந்தியா அப்புவும். கதை சொல்லியும் ஒரு கடற்றொழிலாளிதான்.
இக்கதையினைக் கதைசொல்லியூடு விபரிக்கும் கதாசிரியர் எடுத்திருக்கும் கதைச்சூழல் இழந்த மண்ணில் நிலவிய சூழல். அச்சூழலில் வாழ்ந்த கதா பாத்திரங்கள். இதற்குரிய காரணங்களில் ஒன்று ஏற்கனவே கூறியிருப்பதுபோல் இழந்த மண் பற்றிய நினைவுகள், கழிவிரக்கம்தாம்.